"வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதித்துவிட்டாங்க!"-என்றாள் மலர்ச்சியுடன்!!அவனோ மனதில் ஒரு பரவசத்துடன் தன் தாயின் முகத்தினை ஏறிட்டான்!
'இனி அனைத்து பொறுப்புகளையும் என் மருமகள் ஏற்பாள்'என்று கூறாமல் கூறினாரா அன்னை???
"என்ன?அம்மாவை சம்மதிக்க வைக்க,அப்பா ஒரு சின்ன ஃப்ராடு வேலை பண்ணிட்டார்!"
"என்ன?"
"அது..."-தந்தையின் திருவிளையாடலை முழுதும் கூற,சிலையாகிப் போனான் அசோக்.
"இது நம்ம லிட்ஸ்டுலையே இல்லையே!"
"நானும் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை...ஒரு நிமிஷம் பயந்துட்டேன்!"
"ஆனா,அம்மாவை ஏமாற்றுவது நியாயமா தோணலைம்மா!"-அந்நொடியிலும் நியாய தர்மங்களை ஆராய்ந்த அவனது மனம் சிவன்யாவின் மனதில் தன் காதலை முழுதாக அங்கீகரித்தது.
"புரியுது!ஆனா,அப்பா சீக்கிரம் இதுப்பற்றி சொல்லிடுவார்!கவலைப்படாதீங்க!நீங்க அப்பா செலக்ஷன்னு தெரிந்தா அம்மா நிச்சயம் வருத்தப்பட மாட்டாங்க!"ஏனோ அக்குரலில் ஒரு நம்பிக்கை தொனித்தது.
தொடரும்!
{kunena_discuss:1149}