தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 07 - ராசு
ஸ்டெல்லா தென்றலின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
அழைப்பு மணியை அழுத்தினாள்.
காந்திமதிதான் கதவைத் திறந்தார்.
வீட்டினுள் நுழைந்தவள் தென்றலைக் காணாமல் தேடினாள்.
“தென்றல்!”
அவள் வீட்டில் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
“பாட்டி! எங்கே தென்றலைக் காணோம்?”
“ஏன்டியம்மா? என்னை எல்லாம் பார்த்தால் மனுசியா தெரியலையா?”
“ஏனாம்?”
“வந்த உடனே உன் தோழியை தேடறியே அதுதான் கேட்டேன்.”
“நான் வர்றதே அவளுக்காகதானே?” <
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அதன் பிறகு பூமிகாவிடம் கொடுத்தவர் முறைத்தார்.
“எடுத்துப் பேசச்சொன்னால் என்னைப்பற்றி என் பேரனிடம் குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறாயா? எல்லாம் இந்தத் தென்றல் உனக்கு கொடுக்கும் செல்லம்.”
“பின்னே! என்னிடம் பேசியதுமே அண்ணன் என்னைக் கண்டுகொண்டாரா? அதுதான். எனக்கு கோபமாகிவிட்டது.”