அவனை அப்படியே அழைத்துச்சென்று காரில் அமர வைத்தான் வினோத்.
அவளிடம் நிதானமாகப் பேசியிருந்தால் அவள் யாரென்று விசாரித்திருக்கலாம்.
‘அண்ணி குழந்தை எல்லாம் சௌக்கியமா அண்ணா?’
அவளது குரல் காதில் ஒலித்தது.
அப்போது தான் இதுவரையில் கண்டது எதுவும் கனவில்லை. அவனது வாழ்க்கையில் நடந்த நனவுதான்.
குழந்தை வேறு பிறந்துவிட்டதா? என்ன குழந்தையாக இருக்கும்?
அவள் தன்னிடம் குழந்தை உண்டாகி இருக்கும் விசயத்தைச் சொன்ன கணம் அவனுக்கு நினைவு வந்தது.
கண்களை மூடினான்.
வெட்கச் சிவப்போடு அவளின் முகம் கண் முன்னே வந்தது.
விபத்தில் அடிபட்டு மனம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவள் என்னைத் திருமணம் செய்து கொண்டது பெரிய விசயம்.
ஏன் என்னைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஒற்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அதைக் கேட்டதும் அவன் தயங்கினான்.
“ப்ளீஸ். என்னை அங்கே கொஞ்சம் அழைச்சுட்டுப்போயேன்.”
“அந்த வீட்டை உங்க வீட்டில் வித்தாச்சு சார். இப்ப அதை வேற ஒருத்தங்க வாங்கியிருக்காங்க.”
“யார் வாங்கியிருந்தாலும் பரவாயில்லை. என்னை அங்கே அழைச்சுட்டுப்போ. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்.”