அவள் குழந்தைக்கென்று கொடுத்த பரிசுப் பொருட்களை தென்றலால் மறுக்க முடியவில்லை.
அளவளாவிவிட்டு அன்று மாலை அவர்கள் கிளம்பினர்.
அவர்களைப் பிரிய மனம் இல்லாமல்தான் அனுப்பிவைத்தாள் தீபிகா.
கால் டாக்சி வேண்டாம் என்று மறுத்துவிட்டு தங்கள் வீட்டு காரிலேயே கொண்டுவிடச்சொன்னாள்.
கார் கண்ணில் இருந்து மறையும் வரைக்கும் சிறு பிள்ளை போல் கையாட்டிக்கொண்டே நின்றாள்.
வினோத் பரபரப்புடன் காணப்பட்டான். தனக்கு விசயம் தெரிந்ததுமே பிரபாகரிடமும், முகிலனிடமும் கூறிவிட்டான்.
இப்போது அவர்களுக்காகதான் காத்துக்கொண்டிருக்கிறான்.
அவன் இப்போதுதான் கம்பெனியில் சேர்ந்திருக்கிறான். அதற்கு முன்பு அவனது தந்தைதான் அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தது.
அவள் என்ன பேசினாள் என்று புரிந்தது.
அவன் கோயிலுக்கு வெளியே ஓடினான். அவளைக் காணவில்லை. அங்குமிங்கும் தேடினான்.
அவனது பரபரப்பைக் கண்டு வினோத் ஓடிவந்தான்.
“என்னாச்சு முகில்?”
முதலில் அவன் என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்தான். கண்கள் கலங்கிவிட்டன.