தன் குல வாரிசு எங்கேயோ எப்படியோ பிறந்து வளர்கிறதா?
கணவனை எரிக்காத குறையாய் முறைத்தார்.
ஏற்கனவே மன வேதனை தாளாமல்தான் வேலாயுதத்திற்கு உடம்புக்கு முடியாமல் வந்ததே.
அவள் உண்டாகியிருந்தாள் என்ற விசயமே அவருக்கு இப்போதுதான் தெரியும். அந்த விசயம் அப்போதே தெரிந்திருந்தால் அவளைப் போக விட்டிருக்க மாட்டார்.
அதனால்தானோ என்னவோ ஸ்ருதி அந்த விசயத்தை அவரிடம் சொல்லவிடாமல் பண்ணிவிட்டாள்.
அதை ஸ்ருதியின் வாயாலேயே கேட்க நேர்ந்த போது அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே நித்திலா கருவில் உண்டானக் குழந்தையை இழந்து தவித்ததையும் அதன் பிறகும் வாரிசுக்காக ஏங்கித்தவித்ததையும் கையாலாகாததனத்துடன் கண்டவர்தானே?
இந்த உண்மை தெரிந்த உடனே அவளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரது நினைப்பு ஈடேறவில்லை. அந
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10255-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-06">Episode 06
தொடரும்...
{kunena_discuss:1154}