“இப்ப அவங்க அந்த வீட்டில் இல்லை சார். உங்களை மாதிரி வந்தா போனா தங்கறதுக்காகதான் வாங்கியிருக்காங்க. நான் அந்த வீட்டைப் பராமரிக்கிறவர்கிட்;ட உங்களை அழைச்சுட்டுப்போறேன். வாங்க.”
என்று அழைத்துச்சென்றான்.
வினோத் அந்த நபரிடம் என்ன சொன்னானோ?
அவர்களது தோற்றம் நம்பிக்கையைத் தர அவரும் சம்மதித்தார்.
அந்த வீட்டைக் கண்டதுமே முகிலன் பரவசமானான்.
அவள் உருவாக்கி வளர்த்த தோட்டம் அப்படியே பராமரிக்கப்பட்டு வந்தது.
வீட்டுக்குள் சென்றான். ஒவ்வொரு இடத்திலும் அவளுடன் இருந்தது பசுமையாய் இருந்தது.
அவளுடன் வாழ்ந்த இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணமே பரவசத்தைத் தந்தது.
வீட்டைச் சுற்றி வந்தவன் கடைசியில் தோட்டத்திற்குள் வந்தான். அவள் தங்கள் வாரிசு உருவான செய்தியைச் சொன்ன போது தான் அமர்
...
This story is now available on Chillzee KiMo.
...
்களால் விரட்ட முடிந்தது. அவள் என் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்தாள்னு உங்களுக்குத் தெரியுமா? அப்படி என்னப்பா உங்களுக்கு பணம் மேல் ஆசை. இப்ப இத்தனை பணமிருந்தும் எனக்கு நிம்மதியில்லையே.”
அவன் சொன்ன செய்தி கேட்டு வள்ளியம்மை மனம் உடைந்தார்.
அவள் குழந்தையைச் சுமந்துகொண்டு சென்றாளா?