அங்கு வார்சா, ஏற்கனவே அன்று மாலில் ஆதித்தை இன்னொருத்திக்கூட நெருக்கமாக பார்த்ததை ஜீரணிக்கமுடியாமல் அதை தன நட்பு வட்டத்தில் கூட தெரிவிக்க மனதில்லாமல் வெதும்பிக்கொண்டு இருந்தாள்.
இந்த நிலையில் சற்றுமுன் வர்ஷாவின் முன் வந்த வினோத். வர்ஷா டுடே ஐ மெட் ஆதித் இன் தி ஹோஸ்பிட்டல் என்றவன், ஆதிதின் காரில் அழகுநிலா ஏறுவதுபோன்ற காட்சி அடங்கிய புகைப்படத்தையும் ஆக்சிடென்ட் ஆன அழகுநிலாவை அவனே நேரில் வந்து தாங்கிப் பிடித்து கொண்டு வந்ததை, தான் பார்த்த விசயத்தை சொல்லி யார் அந்த அழகுநிலா? என்று கேள்வியும் கேட்டான்
அதில் கடுப்பான வார்ஷா அவனிடம் ஆத்திரத்தில் ம்...ஆதித்தின் செட்டப் போதுமா…? என்று கடுப்புடன் கத்திவிட்டாள்.
உடனே வினோத் ,வாட்...? ஐ ஆம் சாரி. நான் உன்னை டெண்சனாக்கனும் என்று கேட்கவில்லை. நான் பார்ட்டிக்கு கிளம்பிக்கொண்டு இருக்கும்போது என்னுடைய நண்பன் ரமேஷ் போன் செய்து அவனும் அவன் கலீக் அழகுநிலாவும் பைக்கில் வரும் போது சின்ன ஆக்சிடென்ட் ஆகிவிட்டது ஹாஸ்பிடலில் இருக்கிறேன், என்னுடைய பைக் ஆக்சிடென்ட் ஆனா இடத்தில் இருந்து போலீஸ் எடுத்து சென்று விட்டார்கள். சோ! என்னை வந்து பிக்கப் பண்ணி வீட்டில் ட்ராப் பண்ணிடுன்னு போன் செய்தான். அங்க போனபிறகுதான் தெரிந்தது அவனுடைய கலீக் அழகுநிலாவிற்கு உதவுவதற்காக ஆதித்தே நேரில் வந்திருப்பதால் உனக்கும் தெரிந்த பெண்ணாக இருக்குமோ என்று கேட்டுவிட்டேன். இப்படி நீ ரியாக்ட் கொடுப்பாய் என்று தெரிந்தால் கேட்டிருக்கமாட்டேன். சாரி வர்ஷா என்றபடி விலகிச்சென்றான்..
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அவளின் பக்கத்தில் இருந்த ரோசி வர்ஷாவை பார்த்து, என்ன வர்ஷா எங்ககிட்டெல்லாம் கை கொடுத்தா கற்பு பறிபோய்விடும் ரேஞ்சில் உன் ஆள் பிலிம் காட்டினாரு. இப்போ.... என்னடான்னா... மெயின் பிச்சரா உன்னை காட்டிட்டு செகண்ட் ரோல் ஒன்ன பிளே பண்றாரு ஆதித். எனக்கு அப்போவே தெரியும் இந்தமாதிரி ஓவரா சீன போடுகிறவன் எல்லாம் பக்கா ப்ளேபாயாகத்தான் இருப்பாங்க என்று சொன்னாள்.
அவள் கூறுவதைக்கேட்ட வர்ஷாவிற்கு ஆதித் மேல் கொலைவெறியும் அதேபோல் திடீரென்று தன்னுடைய மதிப்பு தனது நட்புவட்டத்தில் கீழிறங்குவது போன்ற பிரமையும் உண்டானது.
அப்பொழுது அங்கு நடப்பதையெல்லாம் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த மாதேஷ், வர்ஷாவின் அருகில் நிதானமாக நடையுடன் வந்துகொண்டே ரோசியை பார்த்து, இவ்வளவு மதிப்புமிக்க அழகான வர்ஷாவை தக்கவச்சுக்க ஆதித் உங்கமுன் சீன போட்டிருக்கிறார். பாவம் ஆதித்துக்கு தெரியவில்லை, வெட்டி சீனில் எமார்ந்து போகும் முட்டாள் கிடையாது இந்த வர்ஷா என்றவன், வர்ஷவிடம்
“கமான் புயூட்டி! சியர்அப்” என்று கூறியபடி அங்கிருந்த இசைவெள்ளத்தில் ஜோடியாக ஆடிக்கொண்டிருந்த மற்றவற்களுடன் அவளையும் தன்னுடன் ஜோடியாக இணைத்து ஆடுவதர்க்காக தனது கைநீட்டி அவளை அழைத்தான் .
வர்ஷா இதுவரை பார்டிகளுக்கு என்ஜாய் செய்ய வந்தாலும் அவள் ஹாட்டிரிங்சை சாப்பிடமாட்டாள். கூல் ட்ரிங்க்ஸ் கூட அவள் வாங்கி வைத்திருப்பதைத்தான் குடிப்பாள். .மேலும் தனது ஆண் நண்பர்களுடன் பட்டும் படாதவாறும் சந்தர்ப்பத்தின் காரணமாக கைகுலுக்குவாள். அதேபோல் நாசூக்காக ஆண்களின் ஹக்கை பட்டும் படாமலும் அனைத்ததுபோல் பாவனைகாட்டி தவிர்க்கும் வித்தையையுக் கற்றுவைத்திருந்தாள்.
எப்பொழுது ஆதித்தை காதலிக்க ஆரம்பித்தாலோ! அதிலிருந்து அந்த மாதிரி போலியான தலுவல்களைக்கூட அவள் செய்தது கிடையாது. ஆனால் இப்பொழுது மாதேஷ் அவளை ஆடுவதற்கு கைநீட்டி அழைத்த நேரம், சரியாக ஆதித் அங்கே எண்டர் ஆகி தன்னைப் பார்த்து வருவதை கவனித்த வர்ஷா தன்னை நண்பர்கள் மத்தியில் அவமானப்படுத்திய ஆதித்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இதுவரை அவள் செய்யாத செயலை செய்ய முடிவேடுத்து ஆதித்தை பார்த்துக்கொண்டே கைநீட்டிய மாதேசின் கைப்பற்றி எழுந்து அவனுடன் ஆடுவதற்கு தோதாக அவனின் தோளில் ஒருகையை போட்டாள் வர்ஷா.
ஆதித் அந்த பார்டி ஹாலினுள் நுழைகையிலேயே அவனின் பார்வைவட்டத்தில் விழுந்தது “மாதேஷ் ஓர் கையை அவளின் முன் நீட்டி ஆட அழைக்கும் காட்சிதான்”. அப்பொழுதே ஆத்திரம் பொங்க அவனை பார்த்தபடி முன்னேறியவனுக்கு முகத்தில் செருப்படி விழுந்ததுபோல் இருந்தது வர்ஷாவும் அவனுடன் இணைந்து ஆடுவதற்கு தன்னை பார்த்தபடி எழுந்து அவன் தோளில் கையை போட்டது.
உடனே ஆதித்தின் கை அவர்கள் இருவரையும் .அறைய துடித்தது ஆனால் தொழிலில் தன்னை பெரிய வெற்றியாளனாய் ஆக்கியதில் விழைந்த அவனது நிதானம் அவ்வாறு செய்யவிடாமல் ஆதித்தை தடுத்தது. உள்ளுக்குள் பொங்கிய கோபத்தை வெளியில் தெரியாமல் மறைத்து உதட்டில் அவர்கள் இருவரையும் பார்த்து இகழ்ச்சியான புன்னகையை கொண்டுவந்தவன், மேலும் நடையில் நிதானத்தையும் வருவித்தபடி அவர்களின் அருகில் நெருங்கினான். மாதேஷின் தோளில் இருந்த அவளது கையை சுட்டிக்காட்டியபடி இருவரையும் பார்த்து இது எதுக்கு என்னை பழிவாங்கவா? அல்லது... என்றவன் வர்ஷாவின் கண்ணை பார்த்தபடி உன்னை நீயே கேவலப்படுத்துவதற்காகவா? என்று கேட்டான்.