(Reading time: 26 - 52 minutes)

என்னிடம் சொல்லவேண்டியதுதானே! வா, நான் பின்னிவிடுகிறேன் என்றவள், அவளை ஸ்டூலில் உட்காரவைத்து அழகாக பின்னி பூவைவைத்தவள் அவளுக்கு நெட்டிமுறித்து என்கண்ணே பாட்டும் போல இருகிறாய் நிலா! என்றவள், ஆனால் இந்த சேலைக்கு நீ போட்டிருக்கும் நகை பொருத்தமாக இல்லையே என்றவள் ஏற்கனவே பூவுடன் அவள் போடுவதற்கு அன்று காரில் வைத்து தனக்காக வாங்கியது என்று கூறி ஆதித்கொடுத்த [வர்சாவிற்கு மாலில் வாங்கிய நகையை] நகையை எடுத்துவைத்திருந்தவள் இதை போட்டுக்கோ அழகுநிலா இந்த நகை நீ உடுத்தியிருக்கிற சேலைக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறினாள்.

அவள் கூறியதை கேட்ட அழகுநிலா அச்சோ.... ஆண்டி! எனக்கு இது வேண்டாம் ப்ளீஸ்... என்னை வற்புறுத்தாதீர்கள் என்று வழக்காடிக் கொண்டிருக்கும்போது குளித்து முடித்து பனியன் ஷாட்ஸ்சுடன் கீழே தன பெற்றோரிடம் ஆசிவாங்கி புதுஉடை வாங்கி போடுவதற்காக் கீழே வந்தான் ஆதித்.

அவன் வருவதை பார்த்த ஜானகி, ஆதித் நீயாவது இவளிடம் சொல்லேன், இந்த சேலைக்கு அன்று நீ எனக்கு வாங்கி கொடுத்த நகை பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி போடச் சொன்னால் வாங்கி போட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள். நீ சொன்னாள் போட்டுக்கொள்வாள். அவளை இதை போடச்சொள்ளேன் என்று கூறினால் ஜானகி. .

காலையில் எழுந்ததும் இன்று நடந்த நிகழ்வின் தாக்கத்தில் முதலில் “சே அவகூட இப்படி ஆகிடுச்சே” என்று நினைத்தவன் பின் அவளை இழுத்து அணைத்தபோது உணர்ந்த மென்மையில் சும்மா பூப்போல தான் இருக்கிறாள் என்று ரகசியமாக அந்த உணர்வை ரசித்தவன் அப்பா மோகினி மாதிரி இழுக்கிறாள் அவட்ட ஜாக்கரதையாக இருக்கணும் என்று நினைத்தபடி ஏதோ ஒரு கலவையான உணர்வுடன் உதட்டில் புன்னகையுடன் கீழே இறங்கிவந்த ஆதித் அவளை உட்காரவைத்து அவனின் அம்மா பூ வைத்து சிரித்த முகத்துடன் அவளுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே வந்தவன் மனம் ஏனோ அந்த காட்சி அவனுக்கு மன நிறைவை கொடுத்தது.

ஆனால் கீழே இறங்கியபின் இருவருக்குள்ளும் ஏதோ வாக்குவாதம் நடப்பதை பார்த்தவன் எதுக்கு என்ற மனதில் உதித்த கேள்வியுடன் அவர்களின் அருகில் வந்தவனிடம் ஜானகி காண்பித்த அந்த நகை வர்சாவையும் அதை தொடர்ந்து நேற்று நடந்த நிகழ்வையும் அவனுக்கு ஞாபகப்படுத்த திரும்பவும் ஆதித்துக்கு அழகுநிலாவின் மனதை காயப்படுத்தும் வெறியை கிளப்பியது.

ஏம்மா.. அவளை போய் கட்டாயப்படுதுறீங்க இந்த காலத்தில் யார் உதவி செய்தவர்களுக்கு நன்றியுடன் இருக்கிறார்கள், இவளிடம் அதை எதிர்பார்த்தால் நாம் ஏமார்ந்துதான் போவோம் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் அழகுநிலாவிற்கு அவனின் முகத்தின் கடுமையும் தான் நன்றி மறந்தவள் என்று கூறிய வார்த்தையும் கேட்டு சுறு சுறு என்று கோபம் ஏறியது. இப்போ எதுக்கு இவர் என்னை பார்த்து நன்றி மறந்தவள் என்று கூறுகிறார் ஆண்டி, நாங்க கிராமத்துகாரங்க எனக்கு நீங்கள் இவ்வளவு பெரிய உதவி செய்திருகிறீர்கள் என்ற விஷயம் என் குடும்பத்திற்கு தெரிந்தால் நான் மட்டும் அல்ல என் குடும்பமே உங்களை குல சாமியாக வரிந்து கட்டி ஏழு தலைமுறைக்கும் உங்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்று அவங்களிடம் சொல்லுங்க ஆண்டி என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் ஹா.... நாங்களும் பார்க்கத்தானே போகிறோம், இனி வரும் நாட்களில் உன் நன்றி விசுவாசம் எப்படி பட்டது என்று ஒரு புருவம் உயர்த்தி அவளின் மேல் தீவிரமான் ஒரு பார்வையை செலுத்தியபடி கூறினான் ஆதித்.

அவர்களின் வாக்குவாதத்தை மேலும் தொடரவிடாமல் ஜானகி இரண்டுபேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா... என்றவள், ஆதித்தை பார்த்து இப்போ எதுக்கு ஆதித் நன்றி அது இது என்று பேசுற அவளை இதைப் போடச்சொல்லு அது போதும் எனக்கு என்றாள்.

உடனே அதுதான் போடச்சொல்றாங்கள்ள சும்மா சீன போட்டாமல் வாங்கிப்போட்டுக்கோ என்றான் ஆதித்

திரும்பவும் அதை போடமாட்டேன் என்று கூறினால் அதற்கு குதர்க்கமாக வேறு ஏதாவது ஆதித் பேசினாலும் பேசுவான் என்று நினைத்தபடி என்னால் கை தூக்கி போடமுடியாது ஆண்டி நீங்களே நல்லா கொக்கி விலகாத மாதிரி போட்டுவிடுங்க என்றபடி போடுவதற்கு தோதாக காண்பித்தபடி அமர்ந்தாள்.

ஜானகியும் அந்த பூவடிவ நெக்லஸ் மற்றும் தோடுடன் ஒரு கையில் பிரேஸ்லெட்டும் போட்டவள் அவளின் மற்றொர்கையில் அவளின் வளையலையும் போட்டுவிட்டாள். பின் அவளை தள்ளிநின்று பார்த்தவள், வந்ததும் உனக்கு திரிஷ்டி சுத்தி வைக்கணும் என்று கூறினாள்.

அப்பொழுது ஆதித், ஏற்கனவே சாதாரன உடையிலேயே மயக்கும் மோகினி போல் இருப்பாள். இதில் இப்படி அழகுவேறு இவங்க அவளை படுத்துனாங்கனா பாவம் என்னை போன்ற ஆண் ஜென்மங்கள் எத்தனை பேர் தலை கிறுகிறுத்து போகப் போகிறார்களோ தெரியலப்பா! என்று மனதிற்குள் நினைத்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.