(Reading time: 26 - 52 minutes)

அவன் அவ்வாறு கேட்டது வர்ஷவிர்க்கு சுருக்கென்று மனதில் முள் தைப்பதுபோன்ற வலியைக் கொடுத்து. அவள் முகம் அதன்பின் கோபத்தால் சிவந்தது. .

வர்ஷாவும் அவன் கூறியபடி அதே அழுத்ததுடன் வார்த்தைகளை கொட்டினாள். அன்னைக்கு நீங்க மாலில் ஒருத்தியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்தது உங்களை கேவலப்படுத்திக்கிடவா? என்றவள், அச்சோ! நீங்கலெல்லாம் ஆம்பிள்ளைகள் எப்படினாலும் இருக்கலாமம்ல...! என்றவள், ஆனால்! உங்களுக்கு வரும் பொண்டாடி மட்டும் கைபடாதரோஜாவா இருக்கணுமோ?

இங்கபாருங்க ஆதித்தராஜ், என்னைக்கு இன்னொருத்தியோட நெருக்கமா உங்களை பார்த்தேனோ இனிமேல் எனக்கு அட்வைஸ் செய்யும் தகுதியை என்னிடம் இழந்துவிட்டீர்கள் என்றாள்.

பின் ஆதித்தின் மேல் அலச்சியமான பார்வையை வீசியவள் , கம்மான் மாதேஷ், லெட் ஸ்டார்ட் வித்with டான்ஸ். என்றதும், ஆதித் ஏய்...! என்று கர்ஜித்தவன் உண்மைதெரியாமல் நீ எல்லைமீறிட்ட “அதுவும் இவனுடன்” இனி நீயே தேடி என்னிடம் வந்தாலும் எனக்கு நீ வேணாண்டி என்றவன் விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான்.

தித் வீட்டிற்குள் நுழைந்தபோது இரவு பத்தரையை கடந்திருந்தது. எட்டுமணிக்கு வீட்டிற்கு வந்து அழகுநிலாவை இறக்கிவிட்டு போனதற்குப் பின் இப்பொழுதுதான் வீட்டிற்குள் புயல்வேகத்தில் நுழைந்தான்.

அழகுநிலாவிற்கு ஹாஸ்பிடலில் வலிதெரியாமல் இருக்க போட்டுவிட்ட ஊசிமருந்து மாத்திரைகளின் உதவியால் அவள் கண்கள் சொருகுவதை பார்த்த ஜானகி அவள் வந்துவுடனேயே அவளின் சேலையில் இருந்த இரத்தக் கரையைப் பார்த்தவள் தன்வீட்டு வேலைகாரி வேலம்மாவிடம் பணம்கொடுத்து அவள் மாற்றுவதற்கு நைட்டி வாங்கிவரச் சொல்லியிருந்ததாள். அவள் வரும்வரை நிலாவிடம் பேச்சுக்கொடுத்தவள் அவள் வாங்கிவந்ததும் அவள் உடையை மாற்றச் சொல்லிவிட்டு தன ரூமிற்கு அருகில் இருந்த அறையில் அவளை படுக்கச்சொல்லியவள் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.

பேசிக்கொண்டிருக்கும்போதே மருந்தின் உதவியால் ஆழ்ந்த உறக்கத்திற்கு அவள் சென்றதை பார்த்த ஜானகி, அந்த அறையின் கதவை வெறுமனே சாத்திவைத்தவள் ஹாலில் அமர்ந்து ஆதித்தின் வருகைக்காக காத்து இருந்தாள்.

ஆதித் நடையும் அவனது முகமுமே அவன் கோபத்தில் இருப்பதை உணர்த்த இப்போ எதுக்கு ஆதித் இத்தனை கோபம் எதுவும் பிரச்சனையா என்று கேட்டால் ஜானகி

தனது அம்மாவிடம் ஒன்றுமில்லை அம்மா! ஒரு நம்பிக்கைத் துரோகியை இப்போது பார்த்துவிட்டு வந்ததால்தான் கொஞ்சம் டென்சன் ஆகிவிட்டேன் என்றான். அவன் கூறியத்தைக் கேட்ட ஜானகி யாருப்பா அது? உனக்கு எதுவும் கஷ்ட்டம் கொடுத்துவிட்டார்களா? என்று தவிப்புடன் கேட்டார்

அவர் அவ்வாறு கேட்டதும் என் கிளையன்ட் தான்மா அவருடன் இனி பிசினெஸ் பண்ணகூடாது என்று முடிவெடுத்து இருவருக்கும் இடையில் இனி எந்த சம்பந்தமும் இல்லையென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். சரி உங்க ஊரு பொண்ணை எங்க காணோம்? என்று அழகுநிலாவின் மேல் தனக்கு கோபம் என்பதை மறைத்து புண்ணகையுடன் கேட்டான் .

அவன் அவ்வாறு கேட்டதும் அதென்ன எனக்குமட்டும் தான் அவள் தெரிந்தவள் என்கிற மாதிரி நீ கேட்கிற? என்னுடைய கேர்ள் ப்ரெண்ட் அழகுநிலா எங்க என்று கேட்கவேண்டியதுதானே! என்று அவனை கிண்டலுடன் பார்த்தபடிகேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் மனதிற்குள் இவங்கவேறு எனக்கு அவள்மேல் உள்ள கோபம் தெரியாமல் என்னுடன் அவளை ஜோடிசேர்கிறார்கள் என்று நினைத்தவன் வெளியில் தன அம்மாவை பார்த்து மழுப்பலான ஒரு சிரிப்புடன் நம்ம பஞ்சாயத்தை எல்லாம் பிறகு வைத்துக்கொள்ளலாம். முதலில் எனக்கு சாப்பாடு போடுற வழியைப் பாருங்க. பசி வயிற்றைக்கிள்ளுது என்று அவளது கவனத்தை திசைதிருப்புவதற்காக கூறினான் .

பசி என்று மகன் கூறியதும் மற்றபேச்சை நிறுத்திவிட்டு சாப்பாட்டு எடுத்துவைக்க விரைந்தாள் ஜானகி.

ஜானகி சாப்பாட்டை எடுத்து தட்டில் பரிமாறுவதற்குள் ரெப்ரஸ் ஆகி சாப்பாடு மேசையின் முன் அமர்ந்த மகனை, நாளைக்கு உன் பிறந்த நாள். ஞாபகம் இருக்கிறது தானே! எப்பொழுதும் போல் காலை ஆறுமணிக்கே எழுந்து ரெடியாகிவா! வீட்டில் சாமிகும்பிட்டுவிட்டு கோவிலுக்கு போகணும் அவரும் காலையிலேயே வந்துவிடுவார் என்று கூறினாள்.

அவன் பிறந்தநாள் அன்று தனது தாய் தந்தை கொடுக்கும் புதூ உடையை உடுத்தி மேலும் அவர்கள் கொடுக்கும் பரிசை பெற்று ஆசிவாங்கி அவர்களுடன் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் ஒன்றை மட்டும் அவன் மாற்றியதில்லை. ஆனால் தன சிறுவயதில் கலகலப்பாக தன பெற்றோருடன் துள்ளிக்குதித்து வாய் ஓயாமல் தனது அப்பாவுடன் பேசிக்கொண்டு போகும் ஆதித், சென்னை வந்தபிறகு வேலாயுதம் கொடுக்கும் பரிசை கூட தனது அன்னையின் கையில் கொடுத்தால் மட்டுமே வாங்குவான். மேலும் இருவருடன் கோவிலுக்குச் சென்றாலும் கூட போகும் போதிலிருந்து வரும்வரை மௌனம் ஒன்றை மட்டுமே கடைபிடிப்பான்.

அந்த நினைவு வர, சரி என்று வாய் முணுமுணுத்தாலும் அவன் வாய் அம்மா அவ எங்க காணும்? சாப்பிட்டுவிட்டாளா? என்று அழ்குநிலாவை பற்றி அறிந்து கொள்ளக் கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.