(Reading time: 26 - 52 minutes)

வெளியில், ஏம்மா அவளே சரியான பட்டிக்காடு இவளை போய் யாராவது கண் வைப்பார்களா? நீங்க வேறு சுத்திப்போடனும் என்று ஜோக் அடிச்சுக்கிட்டு இருக்குறீங்க என்றான். அவளின் மேல் தனக்கு உண்டான மயக்கம் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் அழகுநிலாவை வேண்டுமென்றே காயப்படுத்தும்படி கூறினான்.

அப்பொழுது கிளம்பி ஹாலுக்கு தானும் ஜானகியும் ஆதிதுக்கு வாங்கிய பரிசு மற்றும் அவனுக்கு புது உடையையும் ரூமில் குளித்து கோவிலுக்கு புறப்பட்டுவிட்டு எடுத்துவந்த வேலாயுதம் ஜானகியிடம் கொடுத்து அவனிடம் கொடு ஜானகி என்றார்.

அதை கையில் வாங்கிய ஜானகியின் காலில் விழப்போன ஆதித்தை ஒருநிமிஷம் பொறுங்க ஆண்டி என்று தடுத்தாள் அழகுநிலா

உடனே எதுக்கு நிலா என்று கேட்ட ஜானகியிடம் அதென்ன ஆண்டி தம்பதி சகிதமா அங்கிள்கூட சேர்ந்து நின்று புதுசு கொடுத்து உங்க மகனை ஆசிர்வதிக்காமல் தனியாக நீங்கமட்டும் எப்படி? என்றவள் அங்கிள் போய் ஆண்டிகூட சேர்ந்து கொடுத்து ஆசி கூருங்க என்றாள்

உடனே ஆதித் எதுவும் கோபப்பட்டு அங்கிருந்து போய்விடுவானோ? என்ற பதட்டம் இருவருக்கும் தொற்றிக்கொண்டது. எனவே ஜானகியும் வேலாயுதமும் கலவரத்துடன் ஆதித்தை பார்த்ததும் அவன் அவர்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டான். மேலும் ஏனோ அழகுநிலாவின் முன் அவனுக்கு தன பெற்றோரை விட்டுக்கொடுக்க முடியவில்லை.எனவே

அவரையும் சேர்ந்து நிக்கச்சொல்லுங்கமா என்று ஜானகியிடம் கூறினான். அவன் அவ்வாறு கூறியதும் வேகமாக ஒரே எட்டில் ஜானகியுடன் இணைந்து நின்ற வேலாயுதத்திற்கு உணர்ச்சி பெருக்கில் கைகள் நடுங்கியது.

ஜானகிக்கு ஆனந்தத்தில் கண்ணீரே கண்களில் நிரம்பி வடிய ஆரம்பித்தது. உதட்டில் புன்னகையுடன் கண்களில் கண்ணீருடன் உங்க புள்ளைக்கு கொடுக்க எதுக்குங்க கை நடுங்கனும் புள்ள காலில் விழுந்துட்டான் ஆசி கூறுங்க என்று கூறினாள் ஜானகி.

கீழே அவர்களின் காலில் விழுந்த ஆதித்தின் கரத்தில் ஜானகியின் கண்ணீர் பட்டதும் நிமிர்ந்து பார்த்த ஆதித்தின் கண்களிலும் கண்ணீர் தளும்பியது. ஆனால் அதை வழியவிடாமல் கட்டுப்படுத்துவதை பார்த்த அவனது பெற்றோருக்கு அன்றைய அவனது பிறந்தநாள் அவர்களின் வாழ்கையில் மறக்கமுடியாத ஒரு ஆனந்த நாளாக அமைந்த சந்தோசத்துடன் நிறைந்த மனதுடன் ஆசி வழங்கினர்.

பின் இருவரும் சேர்ந்து பரிசு மற்றும் உடை அடங்கிய பையை அவனிடம் கொடுத்தனர். அதை வாங்கியவன் திரும்பி தனது அறைக்கு போகும் போது அழகுநிலாவை பார்த்து மனதிற்குள் உன்னை அறியாமலே எனக்கு செலுத்தவேண்டிய நன்றிக்கடனை இப்பொழுது அடைத்துவிட்டாய் பெண்ணே. ஆனால் அது உனக்கு தெரியாது என்று நினைத்தவன் தனது அறைக்கு உடைமாற்ற சென்றான்.

----தொடரும்----

Episode 09

Episode 11

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.