(Reading time: 21 - 42 minutes)

இப்படி என் மனச ஒடச்சிட்டயே.. என்னை பார்த்தா உனக்கு லவ் பண்ண தோணலயாஎன ஹீரோ டயலாக் பேசியவளை அடிக்க துரத்தினாள் மித்ரா..

இருவரின் நட்பும் அழகாய் வளர்ந்தது.. இருவருக்குமே அவர்களின் நட்பின் ஆழம் புரிந்திருந்தது.. ஒருவரையொருவர் விட்டுதராமல் உண்மையான நட்புடன் பழகினர்.. ஆறுமாதம் கடந்ததுகூட தெரியவில்லை.. இந்த ஆறுமாததிற்குள் மித்து-புகழ் காதலும் வளர்ந்தது.. ஒருநாள்,

சங்கு..

என்ன மேடம்..

உன் ஆளோட ஏஜ்லயே அவர் குடும்ப ரிலேடிவ் இருக்காங்களா?..”

என்ன?

இல்ல.. அவருக்கு அண்ணா, தம்பினு யாராவது இருக்காங்களா?”

எதுக்கு?..

எதுக்கா?.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணத்தான்..”

என்ன? என மித்ரா திகைக்க,

ஆமா சங்கு. நீ புகழை கல்யாணம் பண்ணிக்கிட்டா, என்னைவிட்டு எஸ்கேப் ஆகிடுவ.. உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுடி..”

அப்படினா என் அண்ணாவை கல்யாணம் செஞ்சுக்கோ..”

ஆரம்பிச்சுட்டயா உன் அண்ணன் புராணத்தை.. இந்த ஆறு மாசமா டெய்லி உன் அண்ணனைபத்தியே பேசிபேசி என் காதை செவிடாகிட்டு அவரையே நான் கல்யாணம் பண்ண சொல்றயா.. என்னால முடியல..”

நீ நாளைக்கு என் அண்ணனை பார்க்கத்தான போற.. அப்போ பேசிக்கிறேன்..”

ஆமா.. எப்படியோ என் அப்பாவை கன்வைன்ஸ் பண்ணி தாயம்மாவையும், யம்முவும், என்னையும் உன்கூட தங்க பர்மிஷன் வாங்கிட்ட.. உன் அண்ணனையும் சம்மதிக்க வைச்சுட்ட.. அவரும் நம்கூட தங்கறதுதான் இடிக்குது..”

ஏன்..ஏன்..ஏன்?..”

எதுக்கு இத்தனை ஏன்.. உன் அண்ணா தான் மிலிட்டரி சத்யராஜ் ஆச்சே.. மிலிட்டரில இருக்கற மாதிரி எத்தனை கட்டுபாடு உனக்கு.. இதுல நானும் உன்கூட இந்த ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணனுமா.. முடியாது..”

அவரைப்பொறுத்த வரை நீ அவருக்கு ஒரு கெஸ்ட்.. சோ டோண்ட் வொர்ரி..”

வாட்எவர்..என சலித்துக்கொண்ட அமிர்தா மித்ராவின் பங்களாவுக்கு தனது திங்க்சுடன்  புறப்பட்டாள்.. அவளுக்கு தெரியாது மிலிட்டரியின் முதல் சந்திப்பே காரசாரமாக அமையும் என..

மித்ராவின் அண்ணா பங்களா அழகாகதான் இருந்தது.. அமிர்தாவும் தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் தன் பொருட்களை அடுக்கியவள் நேராக மித்ராவிடம் சென்றாள்.. அங்கு அவள் போனை புடுங்கியவள் மித்ராவை ஷாப்பிங் வர சொல்லி கூட்டிச்செல்ல காரை ஓட்டியவள் நேராக மரத்தின்மீது மோதினாள்(remember episode 2 last part).. அமிர்தாவுக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது, மித்ராவோ மயங்கியநிலையில் இருந்தாள்.. அதைக்கண்டு பயந்த அமிர்தா, மித்ராவை எழுப்ப முயற்சிக்க, அவளோ அசையாமல் படுத்துகிடக்கவும் உடனே ஆம்புலன்சுக்கு கால் செய்து ஆஸ்பிட்டலுக்கு சென்று அட்மிட் செய்தாள்..

தனக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டவள் ஆஸ்பிட்டல் மூலம் விக்ரமுக்கு தகவல்தரச்சொன்னவள் பிறகு மித்ராவுக்கு ட்ரீட்மென்ட் நடக்கும் அறையின் முன் காத்திருந்தாள்..

தகவல் கேட்ட விக்ரம் பதறியடித்து கிளம்பி வந்தான்.. வந்தவன் அமிர்தாவை பார்த்து யாரென பார்வையாலே கேட்க, அவள் நடந்ததை கூறியதும் கண்மண்தெரியாமல் கோபப்பட்டவன் அவளை திட்ட ஆரம்பித்து விட்டான்..

யாரைக்கேட்டு நீ என் தங்கைய கூட்டிட்டு போன.. வண்டி ஓட்ட தெரியலனா எதுக்கு வண்டி எடுக்கற.. வீட்டில டிரைவர் இருந்தானே அவனை எதுக்கு வைச்சிருக்கோம்.. அறிவில்ல உனக்கு.. என் தங்கச்சிக்கு ஏதாவது ஆகட்டும், அப்புறம் இருக்கு உனக்கு..என் கண் முன்னாடி நிக்காதே போ..” என கத்தினான்.. அதைக்கேட்ட அமிர்தா அசராமல், அசால்டாக..

முடியாது.. சங்குவை விட்டு நான் நகர மாட்டேன்.. நீங்க வேணா அவளோட அண்ணனா இருக்கலாம்.. நான் அவளோட உயிர்தோழி.. என் சங்குக்கு எதும் ஆகாது.. என்னை இங்கிருந்து போக சொல்ற உரிமை உங்களுக்கு இல்லை.. இந்த மிரட்டர வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்..”

அதைக்கேட்ட விக்ரம் அவளை கோபத்துடன் பார்த்தான்.. டாக்டர் வெளியே வரவும் இருவரும் அமைதியாகினர்..

ஒன்னும் பிரச்சினை இல்லை.. அதிர்ச்சியில் மயக்கம் ஆகிட்டாங்க, கையில அடிப்பட்டு இருக்கு, பார்த்துக்கோங்க..” என்று டாக்டர் கூறிவிட்டு செல்ல, அமிர்தா விக்ரமை பார்த்து முறைத்தாள்.. பின் மித்ராவை பார்க்க சென்றவளை பின் தொடர்ந்தான் விக்ரம்..

மித்ரா.. உனக்கு ஒன்னுமில்லையே.. வலிக்குதாடா..”

அண்ணா.. நீ எங்க இங்க?..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.