நம் நாட்டை பொறுத்த வரை பொதுவாக சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்த என அரசாங்கம், போலீஸ், கோர்ட் இருப்பதாக தான் ஒவ்வொரு சாமானிய மனிதனும் நம்புகிறான்... ஒவ்வொருவரும் தங்களில் நியாயத்தை சொல்லி சட்டத்தை கையில் எடுத்து கொலை, தண்டனை என்று தொடங்கினால் மேலும் மேலும் சீர்கேடுகளே வந்து சேருமே தவிர வேறு எந்த மாற்றமும் வந்து விடாது... என்பது அவனின் நம்பிக்கை...!
இங்கே அவன் நந்திதாவிடம் சொன்னது கூட அவளை போலவே அவனுக்கும் முதலில் வந்திருந்த சந்தேகத்தினால் தான்...!
நந்திதா அவனையே எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருப்பது புரிய,
“பாஸ்... நான் தினம் தினம் எத்தனையோ விதமான மக்களை பார்க்கிறேன்... ஓரளவிற்கு சரியாவே என்னால ஒருத்தரை எடை போட முடியும்... உங்க கணவர் அன்னைக்கு பேசினது எல்லாமே அவர் மனசில இருந்து வந்த வார்த்தைகள
...
This story is now available on Chillzee KiMo.
...
கிப்ட் வாங்கலையே...”
“நல்ல பையன் நீ...! எப்போ வந்து எதை கேட்குற பாரு! அதெல்லாம் என் மருமக வாங்கிட்டா... குட்டி செல்லத்துக்கு அழகா வளையல் வாங்கி இருக்கா...”
“ஓஹோ... சரிம்மா... நீங்க பார்த்து போங்க... நாங்க சீக்கிரம் வரோம்...” என்று சொல்லி விட்டு தங்களின் அறை நோக்கி சென்றான்...