(Reading time: 19 - 37 minutes)

“ஹ்ம்ம் ..சரி.. “

அதற்குள் அவர்கள் அறை வந்து இருக்க, தலையாட்டி விட்டு இருவரும், தங்கள் அறைகளை நோக்கி சென்றனர்.

மலரின் எண்ணமெல்லாம் எங்கிருந்தாலும் அவன் அவளை கவனிப்பதை எண்ணி வியப்பும் , நெகழ்ச்சியும் அடைந்தது..

இத்தனைக்கும் சற்று சிறய அளவிலான மூச்சு திணறல்தான்.. அவளின் அருகிலேயே அமர்ந்து இருந்த, வளர்மதிக்கோ, செந்திலின் மனைவிக்கோ கூட அது தெரியவில்லை.. இரண்டு சீட் தள்ளி அமர்ந்து இருந்தவன் அதை கவனித்து, விசாரித்தது அவளுக்கு மிகவும் ஆச்சரியம்..

அதே போல் இப்படி வீசிங் என்று சொன்னவுடன் மற்றவர்கள் சொல்வது எல்லாம் அட்வைஸ்தான்.. சாப்பாடில் ஆரம்பித்து காண்பிக்கும் டாக்டர், உட்கொள்ளும் மருந்து வரை கேட்டு தெரிந்து கொள்ளுபவர்கள் .. அந்த நோயை பற்றி தான் பேசுவார்களே தவிர, செழியனை போல் அதை நிறுத்த அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்..

இப்போது தோன்றியது, இப்படி எல்லாவற்றிலும் அக்கறை கொள்வதால் தான் இவனின் வார்த்தைக்கு எல்லோரும் கட்டுபடுகின்றனர் என்று.. ஒரு நல்ல லீடர்க்கு உண்டான தனித்தன்மை செழியனிடம் நிறைந்து இருப்பதை உணர்ந்தாள் மலர்.

செந்திலிடம் சொன்னது உண்மைதான் “ஆல். இன் ஆல் அழகு ராஜா தான் இவர்” என்று மனதிற்குள் எண்ணி ரகசிய சிரிப்பு சிரித்தாள் மலர்.

செழியன் மலர் மேல் கொண்ட அக்கறையும் , காதாலும் பற்றி மேலும் தெரிந்து கொள்ள மறுநாள் வாய்ப்பு ஏற்பட்டது மலருக்கு..

“ஹாய்.. பிரெண்ட்ஸ்...

       “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. “

தொடரும்!

Episode # 32

Episode # 34

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.