“சைட் தானே.. யாரு யார சைட் அடிக்கறாங்கன்னு பார்க்கதானே போறேன்.. ஹாய் அத்திம்... எப்படி இருக்கீங்க...? பார்த்து ரொம்பநாள் ஆச்சு..” என்று காவ்யா வியந்து முடிக்க...
“ஹலோ.... நான் நல்லா இருக்கேங்க... அது என்ன ‘அத்திம்.?!’”என்றான் ககன், பார்வையை தாராவிடம் நிலைக்க விட்டபடி...
அவனின் குரலில் அதிர்ந்து திரும்பிய தாரா... நிஜமாகவே அவனை கண்டுவிட்டதில் திகைத்து, சந்தோஷமான ஆச்சர்யத்தில்.. நெஞ்சில் கை வைத்தபடி நின்றுவிட்டாள்... அவளின் இரண்டு மாத தவிப்பு காற்றில் கரைந்துவிட்டதை போல ஒரு உணர்வு... கொஞ்ச நேரம் அதை அனுபவித்தவள்... இந்த முறை அவனை மீண்டும் தவறவிடக்கூடாது என்ற உறுதியுடன்... “ககன்...... நிஜமாவே நீங்கதானா... தேங்க் காட்... பார்க்கவே மாட்டோமான்னு நினைச்சு பயந்துட்டே இருந்தேன்..“ என்றபடி அவன் பக்கம் கை நீட்டினாள்.
அவளின் வரவேற்பிலேயே ககனின் தவிப்பும் விடைபெற “ஹ்ம்ம்.. நானேதான்...”என்று கூறி அவளின் கையை பிடித்துக்கொண்டே... மனம் நிறைந்து புன்னகை புரிந்தான்...
“உங்க ஸ்மைல் ரொம்ப கேட்ச்சி (catchy) அத்திம்....”என்று காவ்யா கிண்டலுடன் கூறி, புன்னகை முகமாக நின்றிருந்த இருவரின் கோர்த்த கைகளை திருப்பதியாக பார்த்தாள்.
“காவீ.........”என்று தாரா தயக்கத்துடன் இழுக்க...
“கோயிங்....(going)”என்றபடி காவ்யா அந்த ஸ்டுடியோவின் உள்ளே சென்று அமர்ந்தாள்.
அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லாத ககனுக்கு... அவனின் அம்மாவும், டாலியும் அவர்களை தாண்டி ஸ்டுடியோவுக்குள் சென்றது மட்டும் தெரியுமா என்ன...!
உள்ளே சென்ற இருவரும்... காவ்யாவை கவனித்துவிட்டு... அவளுடன் அறிமுகப் படுத்திக்கொண்டனர். அத்தைக்கு கண் காட்டிவிட்டு பேச்சை தொடங்கினாள் டாலி.. பேசியபடி பேசி... கரக்க வேண்டிய விஷயங்களை கரந்துக்கொண்டிருந்தாள்... அறிந்தோ அறியாமலோ காவ்யாவும் முதலிலிருந்து கூறிக்கொண்டிருந்தாள்.
இவர்கள் உள்ளே கச்சேரி நடத்த... வெளியில் நின்றிருந்த ஜோடியோ... ஒன்றும் பேசாமலும்.. பிடித்த கைகளை விடாமலும்... மற்றவரையும், அவரின் அருகாமையையும் ரசித்துக்கொண்டே இருந்தனர்... இதுவே போதும் என்பதுப்போல்..!
போதுமா என்ன..?! இது தீராத தாகம் அல்லவா..!!
‘இது அள்ளஅள்ள பருகவேண்டிய அமிர்தமடா....!’
{kunena_discuss:1151}