(Reading time: 16 - 32 minutes)

அத்தனை நேரம் சும்மா இருந்தா சுறா ,

“ஹேய்.. இப்போ எதுக்கு நீங்க சாரி படலம் ஓட்டிட்டு இருக்கீங்க.. அவர் அப்படிதான் சொல்லுவாரு.. அதுக்காக நமக்கு வேண்டியவங்களுக்கு ஒண்ணுன்னா பதறாம இருக்குமா? ஏன் சார் .. அப்படிதான் நிப்பாரா என்ன ?”

அர்ஜுன் “சுறா.... “ என்று பல்லை கடிக்க,

“அட இந்த மிரட்டல் வேலை எல்லாம் வேற யார்கிட்டவது வச்சிக்கோங்க.. எங்கிட்ட வேண்டாம்.. “  என்றவளாக செழியனை பார்த்து

“என்னடா.. தம்பி.. ? உங்க மாமா மூஞ்சே பார்த்துட்டு இருக்க? கோபம் வந்தா தூக்கி அடிச்சுடுவாறு பார்த்துக்கோ” என

செழியன் “அக்கா.. என் குல தெய்வமே.. இப்போதான் மாமா மலை இறங்கி இருக்காரு... நீ வேப்பிலை கொடுத்து ஆட வைக்காத..”

“அட போடா... பயந்தாங்கோலி .. சரி சரி. .வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்.. “ என்றவள்

எல்லோரையும் பார்த்து “வாங்க எல்லோருமே போகலாம்.. எங்க வீட்டில் போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் உங்க இடத்துக்கு போகலாம்..”

செந்தில் “அக்கா “ என்றவன் அவளின் முறைப்பில்

“செழியனுக்கு அக்காதான்னா, எனக்கும் நீங்க அக்காதான்.. நீங்க அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் பர்ஸ்ட் எய்ட் பண்ணுங்க.. நான் போய் எங்க மத்த ஸ்டாப்ஸ்க்கு விஷயத்த சொல்லி வைக்கிறேன்..” என்று விட்டு சென்றான்.

இப்போது அர்ஜுன் “வாடா.. வா.. உனக்கு தண்டனை வீட்டில் காத்துகிட்டு இருக்கு” என்று சிரிக்க, சுராவோ அர்ஜுனை முறைத்தாள்.

ஹாய் பிரெண்ட்ஸ்.. இந்த எபிசொட்லே கொஞ்சம் தெலுங்கு படமும், கமெர்சியல் படமும் பார்த்த எபக்ட் தோணினா.. திட்டாதீங்க.. ஏதோ என் சின்ன அறிவுக்கு எட்டினவரை கொடுத்து இருக்கேன்.. லாஜிக் எல்லாம் பார்த்து திட்டக்கூடாது..  வழக்கம் போல் உங்க கமெண்ட்ஸ்க்கு வைடிங்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 

தொடரும்!

Episode # 34

Episode # 36

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.