‘ஹரிஷ் டிரஸ் நல்லா இருக்கா..’ அவனிடம் கிசுகிசுத்தாள் அனு. ஒரு முறை நின்று திரும்பி அவளை பார்த்தான் ஹரிஷ்.
‘இல்ல உள்ளே பெரிய மனுஷங்க.முக்கியாமனவங்க நிறைய பேர் இருப்பாங்க’
‘அனும்மா..’ என்றான் நிதானமாக ‘என்னை உன்னைவிட முக்கியமானவங்க யாருமே இல்லை.’ ‘அழகா இருக்கேடி பொண்டாட்டி உள்ளே வா. முக்கியமா வலது காலை எடுத்து வெச்சு....’ சொல்லிவிட்டு அவன் சந்தோஷமாய் நடக்க, இவள் முகத்தில் வெட்க பூக்கள் பூக்க பூக்க நடக்க பெரியப்பாவின் இதயம் கலவர பூமியாய் மாறிக்கிடந்தது.
வீட்டுக்குள் நுழைந்தனர் மூவரும். அந்த பெரிய வீட்டின் கூடத்தில் விருந்து நடந்துக்கொண்டிருந்தது. பெரிய தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள், நீதிபதிகள் என நிறையவே பிரபல முகங்கள் கண்ணில் பட பார்வையை சுழல விட்டாள் அனுராதா.
‘அப்பா எங்கே? என விழிகளால் தேடியவன் ‘அதோ அங்கே இருக்கார் வாங்க’ என்றபடி இவர்களுக்கு முன்னால் நடந்தான்..
அங்கே விருந்தாளிகளுடன் பேசிக்கொண்டு நின்றிருந்தார் அந்த மனிதர். உயரமும், அதற்கேற்ற உடல்வாகும், அவருக்கு இன்னமும் கம்பீரம் சேர்க்கும் மீசையுமாக அவர்!! மூவரும் நடக்க பெரியப்பாவின் சுவாசம் அவரிடமில்லை. அப்பாவின் எதிரில் சென்று நின்றான் ஹரிஷ்.
‘அப்பா.’ அழைத்தான் அவரை ‘நான் சொன்னேன் இல்லையாப்பா. அனுவும் அவங்க பெரியப்பாவும்.’ திரும்பினார் சுவாமிநாதன்.
‘வாம்மா..’ அனுவை பார்த்து வாஞ்சையுடன் புன்னகைத்த சுவாமிநாதனின் பார்வை பெரியப்பாவை தொட விருட்டென கழற்றினார் தான் அணிந்திருந்த கண்ணாடியை. சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்தது அவர் பார்வை. பின்னர் ஒரு முறை ஹரிஷை தொட்டுவிட்டு பெரியப்பாவிடமே வந்தன அவர் விழிகள்.
சில வருடங்கள் முன்னால் தன் முன்னே கரம் குவித்து நின்ற சுவாமிநாதன் பெரியப்பாவின் கண் முன்னே வந்து போனார். இப்போது தன்னாலே குவிந்தன பெரியப்பாவின் கரங்கள்.
தொடரும்...
{kunena_discuss:1147}