(Reading time: 16 - 31 minutes)

அரவிந்த் அவளுக்கு அணிவித்த அந்த தாலியும் அவள் கழுத்தினை விட்டு செல்ல, அப்படியே சரிந்து விழுந்தவளை, தூக்கிக்கொண்டு, செல்வியினை தீண்டத்தகாத பொருளாய் பார்த்துவிட்டு மகளை அழைத்து வீடு வந்தனர் இருவரும்…

முழுதாக ஒருவருடம் கூட ஆகவில்லை… சரியாக பத்து மாதங்கள் அவனுடன் வாழ்ந்த அந்த தனிவாழ்க்கை… அவனது விரல் கூட அவள் மீது பட்டிருக்கவில்லை… அதெல்லாம் நினைத்து நினைத்து பார்த்து அவள் அழுதாள்…

அவன் காட்டிய அக்கறை, அன்பு… அவளை அவன் நடத்திய விதம்… இதெல்லாம் நொடிக்கொரு தரம் அவள் கண்முன்னே வந்து வந்து போக, அவள் நிலைகுலைந்து கொண்டிருந்தாள் அணுதினமும்…

இந்நிலையில் அவள் இப்படியே இருந்திட்டால், அது மகளின் உயிருக்கே வினையாய் முடிந்திடும் என்றெண்ணிய அவளின் பெற்றோர்கள், அவளை மீண்டும் கல்லூரிக்கு படிக்க அனுப்பி வைத்தனர் வலுக்கட்டாயமாக…

அவளும் வேறு வழியின்றி செல்ல, ஒருமாதத்திற்குப் பிறகு, அவள் கல்லூரி முடிந்து திரும்பி கொண்டிருந்த பொழுது, வழியில் ஒரு ஆக்சிடெண்ட் நடந்திருக்க, சம்மந்தப்பட்டவனை சுற்றி மக்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்…

அவனை ஏற்றி செல்ல ஆம்புலென்ஸ் சத்தமிட்டுக்கொண்டே வர, அந்த சத்தம் கேட்டதும் அரவிந்த் நினைவில் அப்படியே ரோட்டில் மயங்கி விழ, எதிரே வந்த ப்ரசன் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தவும் சரியாக இருந்தது…

காரிலிருந்து இறங்கியவன் என்ன ஏது என்று காரின் முன் விழுந்தவளை பார்க்க, சப்தமும் ஆடிப்போனது அவனுக்கு…

தன் நேசித்தவள், இருந்திட்ட கோலம் அவனை உரைய வைத்திருந்தது…

வெள்ளைப்புடவையில் முகத்தில் எந்த ஜீவனும் இல்லாது, எந்த ஒரு நகையும் அணிந்திடாது இருந்திட்ட அவளது கோலம் அவனை சிதைத்திட, நடுரோடு என்றும் பாராது, அவளை மடியில் கிடத்திக்கொண்டு அழுதான் அவன் தன் இயலாமையினை வெளிப்படுத்தியபடி…

அவள் தலையிலிருந்து ரத்தம் லேசாக வெளிவர ஆரம்பிக்கவே, பதறியபடி அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனையினை அடைந்தான் அவன் விரைவாக…

எழில் பூக்கும்...!

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.