பொறுக்கியா உன் பிள்ளையை வளர்த்து வச்சுருக்க, அந்த மொபைலில் உன் பையனின் லீலை மட்டும் இல்லை. சொப்பன சுந்தரி பாட்டுக்கு ஒரு மாடல் கூட நீ போட்ட ஆட்டத்தையும் தான் ரெகார்ட் பண்ணி வச்சுருக்கான். உன்னை போன்ற கேடுகெட்டவன எல்லாம் தலைவனு கொண்டாடுறாங்களே அப்பாவி ஜனங்க என்று மேற்கொண்டு ஆதித் பேசப்போகையில்..
ஏலே ஆதித் என்ன பேசிட்டே போற, நான் யார் தெரியுமுல்ல? என்கிட்டே மோதுன உடம்புல உசுரு தங்காது என்றான் காந்தன்
மினிஸ்டர்னா உனக்கு நான் பயந்துருவேனோ? இப்போ உனக்கிருக்கிற மினிஸ்டர் பதவி என்னிடம் இருக்கிற வீடியோவை வெளியிட்டால் இல்லாமல் போய்டும் ஜாக்கிரதை. என்னைய என்ன கேனையனு நினைச்சயா? என் உயிருக்கோ அல்லது என் சம்மந்தமானவர்களுக்கோ எதுவும் ஆச்சு மறுநிமிசமே அந்த வீடியோ உலகம் முழுவதும் நெட்டில் வைரலாக வளம் வரும்,
என்று கூறி விருட்டென்று எழுந்தவன், கடவுள்கிட்ட வேண்டிக்கோ எனக்கோ என்னை சார்ந்தவர்களுக்கோ இயற்கையாக கூட ஆக்சிடென்ட் எதுவும் நேரக்கூடாது என்று. அப்படி எதுவும் ஆச்சு உன் புதிய வீட்டில் அண்டர் கிரவ்ண்டில் ஒரு கஜானா கட்டச்சொன்னியே அந்த கஜானா மாடல் பிரின்ட் இப்ப என்கிட்டதான் இருக்கு அதை எங்கெங்க அனுப்பணுமோ அனுப்பிட்டு, உன் வீடியோவும் உன் மகனின் லீலைகளும் உலகம் முழுவதுவும் பார்கிறபடி செய்திடுவேன் என்று கூறியவன் வெளியில் செல்ல திரும்பினான்.
ஏலே ஆதித், யாருதான் இந்த காலத்தில் யோக்கியனா இருக்கா? என் மகன் கூட அந்த வீடியோவில இருக்கிறது உன் அண்ணன் தானாமே, உன் அப்பனுக்கு நீ இரண்டாவது வீட்டின் பிள்ளையாமே உன் குடும்பமே யோக்கியதை இல்லை. இதில் ஒருமுளத்துக்கு என்னை பற்றி நீ பேசுற என்றான்.
அந்த மினிஸ்டரின் அந்த வார்த்தைகள் அவனது மனதை கீறிவிட்டு வலிக்கச்செய்தது இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்காமல்.
யாரு யாருக்கு அண்ணன்? என் பதிமூன்றாம் வயதில் என் அம்மா இரண்டாம் தாரம் என்று தெரிந்ததும் அவரையே நான் அப்பானு கூப்பிடுவது கிடையாது, அவரின் மகனை போய் என் அண்ணனென்றா நான் நினைப்பேன், நான் ஒன்றும் உன் மகனை போல பாவப்பட்ட அப்பாவின் பணத்தில் உட்கார்ந்து தின்று வளந்தவன் கிடையாது, நான், தானா என்னை செதுக்கி உருவானவன். பணம் இருக்கிறதுனால என் அம்மா மாதிரி நல்லவங்களை இதுபோல பேச்சு வாங்கும் நிலையில் நிறுத்துற உன்போன்ற அசிங்கமெடுத்த ஜென்மம் கிடையாது. நான் நேர்மையா உழைச்சு முன்னுக்கு வந்தவன், என்றவன் விறுவிறுவென்று வெளியில் வந்தான்.
அவன் போனதும் கேசவா இந்த ஆதித்த பேசி வழிக்கு கொண்டுவரமுடியாது போல. அவன் பேசுனதுல இருந்து அவனின் வீக் பாய்ன்ட் அவன் அம்மான்னு தெரியுது. அங்க தொட்டா இவனுக்கு வலிக்கும்ல, அந்த மாதேஷ் பயல ஏத்திவிட்டு அவ சித்திகாரி (ஜானகியிடம்)யை வீட்டில் போய் பிரச்சனை குடுக்க வைக்கணும், என்றவர் தன மகன் நரேனுக்கு போன் பண்ணி மாதேஷை வைத்து எவ்வாறு ஆதித்துக்கு டார்ச்சர் கொடுக்கலாம் என்று யோசனைகூறினான்.
மனம் மிகவும் பாரமாக இருந்தது ஆதிதுக்கு. அந்த மினிஸ்டரெல்லாம் தனது அம்மாவின் தரம் தாழ்ந்து போகிறமாதிரி ஆகிவிட்டதே என்று நினைக்கையில் மனம் ரணமாக ஆகிவிட்டது. கீழே வந்தவனின் கண் அங்கிருந்த பாரினை பார்த்ததும் கால்கள் தானாக அங்கு விரைந்தது கொஞ்சம் மது அருந்தியவன் இந்த நிலையில் தான் அழகுநிலா இருக்கும் அந்த வீட்டிற்கு செல்வது தவறு என்று பட்டது.அவன் இப்பொழுது குடித்துவிட்டு தனது அம்மாவின் முன்பும் போய் நிற்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டவன் அழகுநிலா இருந்த வீட்டில் மாரியப்பனுக்கு போன் பண்ணி செக்யூரிடிசை அலார்ட்டாக இருக்கும் படியும், அங்கிருக்கும் அழகுநிலாவை பத்திரமாக காவல் காக்கும் படி கூறியவன் காரை தனது கன்ஸ்ட்ரக்சன் ஆபீசுக்குவிட்டான்.
அவனது ஆபீஸ் கேட்டில் இருந்த செக்யூரிடி அவனின் காரை பார்த்ததும் விரிய கேட்டை திறந்து விட்டான். காரைவிட்டு இறங்ககி தனது அலுவலக அறைக்குள் சென்றவன் அங்கு ஏசியை ஆன் செய்து அங்கிருந்த சோபாவில் அன்றிருந்த அலைச்சல் மற்றும் போதை காரணமாக விழுந்து உறங்கினான்.
காலையில் ஸ்வீப்பர் வந்து எல்லா அறைகளையும் சுத்தம் செய்தவள் ஆதித்தின் அறையையும் சுத்தம் செய்ய வந்தாள். ஆதித் அங்கு உறங்கிகொண்டிருப்பதை பார்த்து பிறகு வந்து தூக்கலாம் என்று வெளியேறினாள். அபொழுது ஆதித்தின் பி.ஏ சங்கர் ரூம் கிலீன்பன்ன போன மறுசெகண்டே வெளிவந்தவளை பார்த்தவன், ஏன் ரூம் கிளீன் பண்ணாம வந்துட்டீங்க என்று கேள்விகேட்டான். அதற்கு நம்ம முதலாளி சார் உள்ள தூங்குறாரு நான் அப்பறம் வந்து வேலைய முடிக்கிறேன் என்று போய்விட்டாள்.