அவன் சொன்னதும் யோசனையுடன் நீ சொல்றதும் சரிதான் நரேன். இப்போ என் அப்பா ஆதித் வீட்டில இருக்கிறார் என் வீட்டிற்கு அடுத்த வாரம்தான் போவார் அப்போ அவரைப்பார்த்து பேசணும் என கூறினான்.
டேய் பூல் அதுக்குள்ளே அவன் நெட்டில் விட்டுட்டா என்னடா செய்ய. அவர் இப்போ இருக்கிற வீட்டில் இருப்பதுவேனா ஆதித்தும் அவன் அம்மாவுமாக இருக்கலாம். ஆனா அந்த வீட்டை வாங்கியிருப்பது உன் அப்பாதானடா எனக்கென்னவோ நீ டிலே பண்றது உனக்குதான் ரிஸ்க்னு தோணுது. அவன் உன் அப்பாட்ட நீ கெட்டவனு கான்பித்து உன்னை உன் அப்பா வெறுக்கிற மாதிரி செய்து அவரின் எல்லா சொத்துக்களையும் அபகரிக்க இப்போ அந்த வீடியோ பதிவை யூஸ்பண்ணிக்கிட்டா? நீ அவன முந்திக்கோ என கூறினான். அவனின் சொல் மாதேசுக்கு ஆதித்துடனான பகையை கொளுந்துவிட்டு எரிய எண்ணை ஊற்றியது போல் ஆனது.
இரவு குடித்தபோதையின் மிச்சமும் நரேனின் போதனையும் சேர்ந்து மறுநாள் காலையில் கண்விழித்த மாதேசுகுள் சுள் என்று ஏறியது. எழுந்தவன் மனதில் ஆத்திரத்துடன் வேலாயுதத்திற்கு போன் செய்தான்.
வேலாயுதம் நேற்று இரவு தனது ஆடிட்டரை பார்த்து அவர் கூறிய சில கணக்கு முரண்பாடுகளை அறிந்து அதனை இங்கிருந்தபடியே போனில் விசாரித்து சால்வ் செய்து அதிகாலை மூன்று மணிக்குத்தான் தூங்கியதால் போன் அடிப்பது தெரியாமல் உறங்கிகொண்டிருந்தார். ஜானகியும் இரவு முழுவதுவும் தூங்காமல் அதிகாலை வந்து உறங்கும் அவரை தூங்கட்டும் என்றுநினைத்து அந்த அறையின் ஜன்னல் கதவுகளின் திரைகளை எல்லாம் இழுத்துமூடி ரூமினை செயற்கையான இருட்டச் செய்து கதவினை மூடிவைத்துவிட்டு சமயலறைக்கு சென்றுவிட்டார்.
அசந்து தூங்கிகொண்டிருந்த வேலாயுதத்தின் உறக்கத்தை அந்த மொபைல் ஒலி கலைக்க முயன்றும் முடியாமல் தோற்றுப்போய் அணைந்துவிட்டது. மூன்றுதடவை தனது அப்பாவிற்கு போன் செய்த மாதேஷ் அவர் எடுக்காததால் தன வீட்டு டிரைவர் முருகனுக்கு போன் செய்து அப்பா எங்கிருக்கிறார் என்று விசாரித்தான்.
அவன், ஐயா இப்போ ஜானகி அம்மா வீட்டில் தான் இருக்கிறார்கள் சின்னய்யா என்று சொன்னதும் , சரி என்று வைத்தவனுக்கு கோபம் என்றால் அப்படி ஒரு கோபம், அந்த வீட்டில் இருந்தா என் போனை அட்டன் பண்ணக் கூடாது என்று இருக்கா? அந்த அளவு என்னை விட அப்படி என்ன அவர்கள் உசத்தி? என்றவன் நேரிடையாக அங்கே சென்று வேலாயுதத்தை பார்த்து பேசி தனக்குத்தான் அவர் அப்பா என்றும் ஆதித் வேண்டுமென்றே போலியாக ஒரு வீடியோவை வைத்துக்கொண்டு தன்னை மிரட்டுவதாக அவரிடம் கூறி அதை அவனிடம் இருந்து வாங்கிகொண்டு தன்னை நல்லவன் என்று காட்ட நினைத்து அங்கு விரைந்தான்.
மாதேஷ் காரில் ட்ரைவர் இருக்கையில் உட்கார்ந்தபடி கேட்டை திறக்கச் சொல்லி ஜானகியின் வீட்டு வாட்ச்மேனிடம் மிரட்டியவன், ஆரனை பலமாக விடாமல் அலற விட்டான், பின் வாட்ச்மேனிடம் நான் யாருன்னு தெரியாம நடந்துக்கிடுற நீ....! என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே வேலாயுதத்தின் ட்ரைவர் முருகன் மாதேசின் காரை பார்த்து வேகமாக அங்கு வந்தவன் சின்னய்யா நீங்களா? என்று கேட்டபடி நின்றான்
ஏற்கனவே அந்த வாட்ச்மேன் யாரை பார்க்கணும் சார்? என்று கேட்டை திறப்பதற்குமுன் மாதேசிடம் கேட்ட கேள்விக்கே அவன் தன்னை பார்த்து கத்தியதில் பயந்துபோயிருந்தவன், மாதேஷை பாத்து சின்னய்யா என்று ட்ரைவர் முருகன் அழைத்ததை பார்த்து கேட்டை கார் நுழைவதற்கு தோதாக விரிய திறந்து வைத்துவிட்டான்.
ஆனால் முருகன் மாதேஷ் அங்கு வந்ததை பார்த்ததும் கலவரம் அடைந்தான். மாதேசுக்கு ஜானகி மற்றும் ஆதித்தின் மேல் உள்ள பகையுணர்வை மாதேஷ் சிறுவனாக இருந்தபோதே அறிந்தவன் முருகன் ,ஆதலால் அச்சோ இன்று பிரச்சனை வெடிக்கப் போகிறது முதலில் அய்யாவை எழுப்பி இவரை இங்கிருந்து கூட்டிப்போகச் சொல்லனும் என்று வேகமாக வீட்டினுள் நுழைந்தான்.
மாதேஷ் காரை வாசலில் குறுக்காக நிறுத்தியவன் அதில் இருந்து இறங்கி உள்ளே செல்வதற்குள் முருகன் டென்சனாக ஓடிவந்து, தங்கச்சி! ஐயா எங்க? என்று கேட்டதும் ஜானகி என்ன முருகன் அண்ணே இவ்வளவு பதட்டம் என்று கேட்டார்.
உடனே சின்னையா வந்திருக்கிறார். அய்யாவை உடனே வரச்சொல்லுங்கமா என்றதும் ஜானகி ஆதித் வந்ததுக்கா இவ்வளவு டென்சன் என்று கேட்டார். அதற்கு முருகன் அச்சோ, இல்லமா மாதேஷ் ஐயா வந்திருகிறார்கள் என்றதும் முதலில் அதிர்ந்த ஜானகி. பின் அப்படியா வீட்டிற்கு முதன்முதலா வந்த புள்ளைய வானு கூப்பிட்டு உட்காரவச்சுட்டு அவர போய் எழுப்புறேன் என்றவள் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.