(Reading time: 26 - 51 minutes)

அவள் சொன்னதும் என்ன சொல்றா இவ, என்று முனுமுனுத்தபடி கதவை திறந்ததும் ஏசியின் குளிர்ச்சி முகத்தில் அறைந்தது. உள்ளே நுழைந்தவன் கண்ணில் ஆதித் தூங்கிகொண்டிருப்பது பட்டதும் இவர் எப்போ வந்தார் இப்படி தூங்கவேறு செய்றாரே உடம்பு எதுவும் சரியில்லையோ! என்ற யோசனையுடன் அருகினில் வந்தான் அப்பொழுதுதான் தூக்கம் களைந்து கண்விளிப்பவன் முகத்திற்கு அருகில் அவனை குனிந்து பார்த்துக்கொண்டிருந்த தனது பி ஏ வை பார்த்து ஏய்... என்ன... என்ன... என்னசெய்ற என்று கேட்டபடி ஒரு கையில் அவனை பின்னால் தள்ளினான் ஆதித்.

அப்பொழுதுதான் மணியை பார்த்தான் அது எட்டு நாப்பத்தி ஐந்து என காட்டியது. வேகமாக எழுந்த ஆதித் இன்னைக்கு நான் பார்க்கவேண்டிய முக்கியமான பைல்ஸ் எதுவும் இருந்தா எடுத்து மேஜை மேல வை சங்கர் என்றான். சங்கரோ இவர் எப்போ ஆபீசுக்கு வந்தார் இங்கு எதுக்கு படுத்திருக்கிறார்? என்று பல கேள்விகள் மனதில் எழ ஆதித்திட்டேயே கேட்கலாமா? என்று அவன் முகத்தை பார்த்தான் அதனை கவனித்த ஆதித் ரொம்ப யோசிக்காதே சங்கர், நான் நைட்டே இங்க வந்து தூங்கிட்டேன் கொஞ்சம் ஹங்ஓவர்னால சீக்கிரம் எழுந்துக்க முடியல என்றவன். ஓகே மத்ததை யோசிக்காமல் வேலையைப்பார்! என்றவன் ரெஸ்ட்ரூம் சென்றான்.

தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியில் வந்த ஆதித் தான் பார்க்கவேண்டிய வேலைகளை இடையில் காபி மட்டும் வரவழைத்து குடித்துவிட்டு ஒருமணி நேரத்திற்குள்ளேயே முடித்தான், சங்கரிடம் இன்னும் இரண்டு நாளைக்கு நான் நேரில் பார்க்க அப்பாய்ன்மென்ட் எதுவும் இருந்தால் அதை கேன்சல் செய்துவிட்டு, ஒரு... ஒரு வாரம் எல்லா வேலைகளையும் நீயே கவனிச்சுக்கோ! நான் ஆபீஸ் வர மாட்டேன். எதுவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டும் என்னை போனில் தொடர்புகொண்டு பேசு என்று கட்டளையிட்டான். பின் சங்கர் முடிக்க வேண்டிய வேலைகளை கூறி வெளியில் செல்லப் புறப்பட்டு வந்தான்

ஜானகியின் வீட்டிற்கு சென்று அவனுக்கு தேவையான திங்சை எடுத்துக்கொண்டு அழகுநிலா இருக்கும் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து வேப்பேரி ரோட்டிற்கு தனது வண்டியை செலுத்தினான் .

ரவு மாதேசுடன் ரூமில் போதையுடன் அமர்ந்திருந்தான் நரேன். டேய் நரேன் அந்த ஆதித் என்னை அடிச்சிட்டண்டா! அவனை சும்மா விடக்கூடாது அவன எனக்கு வலிக்கிறமாதிரி அவனுக்கும் வலிக்கச்செயனும்டா என்று புலம்பினான் மாதேஷ்..

ஆதற்கு நரேன், போடா நீ அடிவாங்கிட்டு வரத்தான் லாயக்கு. அவனை உன்னால் ஒன்னும் பண்ண முடியாது. நாளைக்கு அந்த வீடியோவையும் நெட்டில் விடப்போறான் நம்மை மரியாதையா பார்த்தவனெல்லாம் மூஞ்சி பின்னாடி காரி துப்பப்போறாங்க. இதுவரை நமக்கு பொண்ணு குடுக்க அலைந்தன் எல்லாம் இனி நாம பொண்ணு கேட்டாலும் கொடுக்கறது சந்தேகம்தான். அந்த ஆதித்தை நம்மளால ஒன்னும் பண்ணமுடியாது என்று கூறினான்.

அதற்கு மாதேஷ் கேட்டான், நீ தானடா என் அப்பா மினிஸ்டர் அவர்கிட்டச் சொன்னா அவனிடமிருந்து அந்த போனையும் வீடியோ பதிவையும் வாங்கிடலாம்னு சொன்ன என்றான்.

டேய் அந்த ஆதித்தை என் அப்பா கூப்பிட்,டு என் மொபைலை குடுக்கச்சொல்லியும் அதில் இருந்த நம் வீடியோ பதிவையும் டெலிட் செய்யச் சொல்லியும் பேசியிருக்காருடா, அவன் கொடுக்கமுடியாதுன்னு சொல்லவும் என் அப்பா அவனிடம் அதற்காக பேரம் பேசியிருக்கிறார், அதுக்கு அவன் சொல்லியிருக்கான் நீ இருக்கிற பகுதியை மட்டும் எத்தனை லட்சம் ரூபாய் கொடுத்தாலும் நெட்டில் கட்டாயம் வைரலாக்காம விட மாட்டேனு சொல்லியிருக்காண்டா! என் அப்பாவும் எவ்வலவோ பேசிப்பார்த்திருகிறார், ஆனா உன் விஷயத்தில் அவன் மசியவே இல்லை ,மாதேஷ் நீ இதை உன் அப்பாவை வைத்து டீல் பண்ணு இல்லாட்டி அவ்வளவுதான் என அவனிடம் சொன்னான் நரேன்.

அதற்கு மாதேஷ், டேய் நரேன் யாருட்ட என் அப்பாகிட்டயா? உன் டாட் மாதிரி கிடையாது அவர், நான் மட்டும் அந்தமாதிரி வீடியோல இருக்கிரேனு அவருக்கு தெரிந்தது என்னை வீட்டிலேயே சேர்க்கமாட்டார் என்றான்

நீ என்னடா புரியாம பேசிகிட்டு இருக்கிற? அவர் உன்னை வீட்டைவிட்டு துரத்துனா கொஞ்சநாள் என்கிட்டவா! அப்புறம் அங்க இங்க அவர்கண்ணில் படுகிற மாதிரி நின்னு இனி இதுபோல செய்யமாடேனு நல்லபிள்ளை மாதிரி சீன்போட்டா நம்ம மகன் திருந்திட்டானு... திரும்ப சேர்த்துகிடப்போராறு. என்ன இருந்தாலும் நீ மூத்த வாரிசுடா .பெத்தபாசம் விட்டுடுமா? இல்ல உன் அம்மாதான் அப்படி இருக்க அவர விட்றுவாங்களா? சரிடா நீ உன் அப்பாட்ட சொல்லி அந்த ஆதித்திட்ட இருந்து என் மொபைலையும் அதில் இருந்த நம்ம வீடியோவையும் கிலீன் பண்ணாட்டி அந்த ஆதித் அதை நெட்டில் போட்டுடுவான் அப்போ உன் அப்பாவுக்கு தெரியாமயா போயிடும்? என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.