ஒரு பெண்ணை ஊருக்கு ஒதுக்குபுறமா ஓ எம் ஆர் இல் அவன் கட்டியிருக்கிற வீட்டிற்கே கூடிப்போய் வைத்திருக்கும் அவன் நல்லவன் நான் கெட்டவனா? என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அங்கு வந்ததுவிட்டான் ஆதித். உள்ளே நுழையும்போதே பாதையில் குறுக்காக நிப்பாட்டியிருந்த காரை பார்த்ததுமே யார் இது இப்படி நிப்பாட்டியிருகிரது என்று யோசித்தபடியே வந்தவனுக்கு வாசலில் நின்றுகொண்டிருந்த மாதேசும் தனது அம்மா அப்பா நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டான்
மேலும் அவர்கள் கோபமாக பேசுவதையும் பார்த்த ஆதித் வேகமாக அங்கு சென்றான் அப்பொழுது அவன் காதில் ஒருபொண்ணை ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓ எம் ஆர் ரோட்டில் உள்ள வீட்டில் கொண்டுபோய் வைத்திருக்கும் அவன் நல்லவன் நான் கெட்டவனா? என்று கேட்ட கேள்வி அவன் காதில் விழுந்தது .
அதில் கோபமடைந்த ஆதித், ஏய் ஊர் மேஞ்சுக்கிட்டுருக்கற நாய் நீ. என்னைப்பார்த்து தப்பா பேசுற! என்று அவனை சட்டயைபிடித்து தரதர என்று இழுத்து வெளியில் விட முயன்றான் அவனின் செயலில் பதறிப்போய் ஓடிவந்த ஜானகி ஆதித் முதலில் அவன் சட்டையை விடு என்றவள் ஆதித்பிடியில் இருந்த அவன் சட்டையை விடுவிக்க முயன்றாள் அதனால் ஆதித் தன பிடியை விட்டான்.
டேய் ஆதித்...! நேத்தும் நீ என்னை அடிச்ச.. இன்னைக்கு மறுபடியும் என் சட்டையை பிடிக்கிற என்று மேல் நெற்றியில் ஒட்டியிருந்த பிளாஸ்திரியை தடவிக்கொண்டே இதுக்கெல்லாம் நீ ஒருநாள் என்கிட்டே அனுபவிப்ப என்றான்.
உடனே ஜானகி, ஆதித் அவனை நீ நேத்து அடித்தாயா? என்று கேள்விகேட்டார் அதற்கு அம்மா எதுக்கு அடிச்சேன்னு காரணத்தை கேளுங்க என்று சொல்லப்போனவனை எனக்கு தேவை உன் விளக்கமல்ல அடிச்சயா? இல்லையா? என்பத்துக்கு மட்டும் பதில்சொல் என்றார். அதற்கு ஆதித் ஆமா அடிச்சேன். பிறகு அவன் பேசுன பேச்சுக்கு என்று மேலே அவன் கூறியதை காதில் வாங்காமல் நீ உன் ஓஎம் ஆர் வீட்டில் ஒரு பெண்ணை தங்கவச்சுருகிறயா? அவன் சொல்றது உண்மையா? என்று அடுத்த கேல்வியை கேட்டார்
அம்மா அது வேறயாருமில்லை மா நம்ம அழகுநிலாதான் என்றான் அவன் அவ்வாறு கூறியதும், “ஆதித் உன்கிட்ட நான் இந்த பதிலை எதிர்பார்க்கல” என்னை உன் அப்பா இரண்டாவதாக கல்யாணம் செய்தாரென்றால் அதற்கு மூலகாரணம் இவன்... என்று மாதேஷை காண்பித்து இவனின் அம்மாதான்
நான் உன் அப்பாவை முதலாளி என்ற எல்லைக்குள் மட்டுமே அவரிடம் பேசியிருக்கிறேன். ஆனால் இவங்க அம்மா அன்று அத்தனைபேர் முன்னாலும் இவரை நான் வச்சிருகிறதா சொன்னதால் என் மாமா என்னை இனி வீட்டில் வைத்திருக்கமுடியாது என்றும அவ்வாறு வைத்திருந்தால் அவரது மகளின் கல்யாணம் நின்றுவிடுமென்றும் என்னை ரோட்டில் நிற்கவைத்தார். எனக்கு பரிந்து அங்கு இவர் பேச முயன்றதால் அதை உண்மைன்னு கூறி இவரின் கையில் மஞ்சள் தாளிகொடுத்து கட்டவச்சாங்க.
அன்னையில் இருந்து நான் வளர்ந்த ஊரில் வெளியில் எங்கு சென்றாலும் என்னை முன்னால் விட்டு பின்னால் என் நடத்தையை கேலிசெய்துதான் பேசுவாங்க. இப்போ நீயும் என்ன செய்திருக்கிற உன் அப்பாவைப்போல் இன்னொரு வெகுளிப் பெண்ணின் வாழ்கையில் களங்கத்தை உண்டாக்கியிருக்கிற என்று மூச்சுவாங்க பேசியவர், உடல் வியர்க்க உடல் நடுங்க நெஞ்சை பிடித்தபடி நின்ற இடத்திலேயே கீழே சரிந்து மூச்சுவிட சிரமப்பட ஆரம்பித்தார்.
அம்மா.... என்று ஆதித்தும் ஜானகி..... என்று வேலாயுதமும் அவரிடம் ஓடிவந்தனர். வேலாயுதம் தன மடியில் அவரை தாங்கியதும் ஆதித் ஆம்புலன்சுக்கு போன் செய்தான். மாதேஷுக்கு ஜானகி சொன்ன இவன் அம்மாதான் காரணம் என்ற சொல்லை கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் ஆகிவிட்டது. அதன் பிறகு அவர் கீழே சரியவுமே தான் தன அப்பா முன்பு மேலும் குற்றவாளியான குறுகுறுப்பு மனதினுள் எழுந்தது. எனவே அவன் இப்போ என்ன செய்ய இங்கிருந்து போகவா அல்லது இவங்க கூட ஆஸ்பத்திரி போகவா! என்ற வினா மனதினுள் தோன்றியது
ஆனால் அங்கு வந்த முருகன் மாதேசிடம் சின்னையா நீங்க கிளம்புங்க ஆம்புலன்ஸ் வரும் போது உங்க கார் இடைஞ்சலா குறுக்க இருக்கு என்று சொன்னதும், தனது காரை எடுத்தவன் வெளியேறிவிட்ட்டான்.
ஜானகிக்கு ஏற்கனவே இதயம் பலவீனமாக இருந்தது இப்பொழுது அது நிற்கவா வேண்டாமா என்று துடித்துக்கொண்டிருந்தது
ஐ சி யூவில் ஆக்சிஜன் உதவியுடன் ஜானகியின் உயிரை காப்பதற்காக டாக்டர்ஸ் முயற்சி செய்துகொண்டிருந்தனர். அதன் வாசலில் இருந்த இருக்கையில் ஒரு மூலையில் ஆதித்தும் மறு மூலையில் வேலாயுதமும் உட்கார்ந்திருந்தனர் .