(Reading time: 28 - 55 minutes)

அங்கு வந்ததில் இருந்து முருகன் ஆதித் கேட்டுக்கொண்டதின் படி அங்கு நடந்த பேச்சுவார்த்தை முழுவதும் தனது மொபைலில் வீடியோ எடுத்து ஆதித்துகு அனுப்பி வைத்தான்.

சென்னையில் ஐ சி யூவில் ஜானகி முழிக்கும் போதெல்லாம் அழகுநிலா அவளின் அருகில் அருகில் இருப்பதற்கு மருத்துவர் அனுமதி வழங்கி இருந்தார். மேலும் மருத்துவர் ஆதித் மற்றும் அழ்குநிலாவிடம் ஜானகியின் மனதிலும் வாழனும் என்ற என்னத்தை விதைக்கச் சொல்லியிருந்தார். அவர் கூறினார், ஆதித் நாங்க என்னதான் ட்ரீட்மெண்ட் கொடுத்தாலும் பேசண்டுக்கும் பிழைத்து எழணும் என்ற எண்ணம் இருந்தால்தான் ட்ரீட்மென்ட் சக்சஸ் ஆகும். ஆனால் அவங்க உங்க கல்யாணத்தை பார்கிறவரைதான் உயிரோடு இருந்தால்போதும் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கதான் உங்க கூட அவங்க நீண்டநாள் வாழனும் என்ற என்னத்தை அவங்க மனசில் விதைங்க. பாசமான உங்க கவனிப்பு கூட அவங்களுக்கு மருந்தாகலாம் என்று சொல்லியிருந்தார்.

எனவே அழகுநிலா ஜானகி கண் முழிக்கும் நேரம்மெல்லாம் அவளின் அருகில் இருந்து பேசிக்கொண்டே இருந்தாள். அத்தை என்று ஜானகியை கூப்பிட ஆரம்பித்து இருந்தாள். மேலும் ஜானகியிடம் அத்தை கல்யாணத்திற்குபிறகு நீங்க எனக்கு அவருக்கு பிடிச்ச சாப்பாட்டை பக்கத்தில் இருந்து செய்ய கத்துத்தரனும் என்றும் மேலும் ஆதித் வேலைகுப்போனதும் நாம ஒன்னா கோவில், ஷாப்பிங் போகனும். வீக் எண்டு சாயங்காலம் நாம் பேமிலியா பீச்சுக்கு போகணும். அப்பறம் எனக்கு நீங்கதான் தலைக்கு குளிக்கும் முன் தலையில் நல்லெண்ணெய் விட்டு மசாஜ் செய்யணும், அப்பறம் நான் இந்த உங்க அழகான கைகளில்தான் மெகந்தி போட கத்துக்கணும், நீங்க மதுரையில் தானே பிறந்ததா சொனீங்க! மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் எல்லாம் முன்னாடி நீங்க போனதுதானே. நான் கல்யாணத்திற்கு பிறகு உங்களை திரும்ப அங்கெல்லாம் கூட்டிட்டுப்போறேன் என்பது போன்ற ஜானகியுடனான அவர்களின் வாழ்கையை பற்றியே அழகுநிலா அவளிடம் பேசிகொண்டிருந்தாள் .

முதலில் அழகுநிலாவின் பேச்சை தன மருமகள் என்று எண்ணத்துடன் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த ஜானகி திரும்பத்திரும்ப அழகுநிலா கூட வாழும் வாழ்கையை பற்றி ஆசையூட்ட அவளுக்குமே அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து பார்க்கணும் என்ற ஆசை பிறந்தது. இதுவரை உறவுகள் அனைவரையும் ஒதுங்கி தன மகனும் தன்னை ஒதுக்கி கணவனும் மாதத்தில் சிலநாள் மட்டும் வாழ்ந்து மற்றநாள் தனிமையிலேயே இருந்த ஜானகிக்கு அழகுநிலாவின் இந்த கலகலப்பான சுபாவமும் தன்னை சுற்றி அவள் பின்னும் அழகான வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்து தனது இத்தனை நாள் தனிமைக்கு ஈடுகட்டவேண்டும் அதற்கு தான் எழுந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அழகுநிலா ஜானகி விழித்திருக்கும் நேரம் போக மற்ற நேரம் வேலாயுதம் தன வீட்டிற்குப் போவதாக சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள். தன வீட்டில் யாரும் வேலாயுதம் வருத்தப்ப்படுமாறு பேசிவிடக்கூடாது என்று கடவுளுக்கு வேண்டுதலும் ஜானகிக்காக தன வீட்டில் இந்த கல்யாணத்திற்கு எப்படியும் சம்மதம் கிடைத்துவிடவேண்டும். மேலும் தன்னையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கடவுளிடம் மனுபோட்டபடி இருந்தாள்.

அங்கு இருந்த ஆதித்துகு அவளின் தவிப்பு தெளிவாக தெரிந்தது. அவனுமே அழகுநிலா வீட்டில் சுமூகமாக எல்லாம் நடக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு ஐ சி யூவில் ஜானகி இருந்ததால் அங்கு ஹாஸ்பிட்டலிலேயே இருந்த வி ஐ பி ரூம் ஒன்றில் அழகுநிலாவும் ஆதித்தும் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அழகிக்கு ஆதித்திடம் கேட்க ஏகப்பட்ட கேள்விகள் மனதில் இருந்தது. ஆனால் கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது. கல்யாணத்திற்கு அவள் ஒத்துக்கொண்டது ஜானகியின் உடல்நிலை மற்றும் தன சூழ்நிலையால்தான் அதேபோல் ஆதித்தும் சூழ்நிலையின் காரணமாகவே தன்னை மணக்க சம்மதித்து இருப்பதாக அவள் எண்ணினாள். அவனுக்கு தான் பொருத்தமிள்ளதவள் அவன் அந்தஸ்த்துக்கும் அவளின் நிலைக்கும் உள்ள வித்தியாசம் அவளை மிரட்டியது.

மேலும் வர்ஷாவின் ஆடம்பரமும், மார்டனான தோற்றமும் கண் முன்னே தோன்றியது. அவளை மறந்து தன்னுடன் ஆதித் இனைய நினைப்பது தன மேல் உள்ள காதலால் அல்ல என்றும் பரிதாபத்தாலும் ஜானகியின் விருப்பத்திர்காவும் என நினைத்தவள், ஆதித்தை விட்டு இங்கிருக்கும் சூழ்நிலை சரியானதும் விலகி விடுவதே அவனுக்கு தான் செய்யும் நன்மை என முடிவெடுத்தாள்.

ஆதித், அழகுநிலா எதுவோ யோசனையுடன் வருவதை பார்த்தவன் ரூமிற்குள் வந்ததும் தனது சர்ட்டை களைந்து அங்கிருந்த கபோர்டை திறந்து ஹேங்கரில் மாட்டிக்கொண்டே அழகுநிலாவிடம், அம்மாவை நாங்க ஹாஸ்பிடல் கொண்டு வந்ததுக்கு இப்போ பார்க்கும் போது பெட்டரா இருக்காங்க அழகி அது உன்னால்தான் ரொம்ப தேங்ஸ் அழகி என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.