கல்யாணத்திற்கு பிறகும் வேலாயுதம் மஞ்சுளாவை நிமிர்ந்தே பார்க்கவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுளா வேலாயுதத்தை எப்போழுதும் ஜானகியுடன் சந்தேகப்பட்டே பேச ஆரம்பித்தார். வீட்டற்கு லேட்டாக வந்தாள் ஜானகியை பார்க்கபோய் வந்ததாக சண்டை பிடித்தார்.
தன்னுடன் வாழாமல் அவர் இருப்பதற்கும் அவரின் ஆசையை ஜானகிடம் போக்கிக்கொண்டு வந்ததால், தான் தேவையில்லாமல் போய் விட்டதாக கூறினார். அவரின் இந்த கொடும் சொற்களில் இருந்து தற்காத்துக்கொள்ள கடனே என்று அவருடன் வாழ ஆரம்பித்தார்.
இந்நிலையில் ஜானகியின் அம்மா மரணம் அடைந்த விஷயத்தை கேள்விபட்டார் வேலாயுதம் ஜானகி தன்னுடைய பிடிவாதத்தால் தனது அன்னையை இழந்துவிட்டதாக அவரின் மேல் கோபம் கொண்டபடி வீட்டிற்கு வரும் போது மஞ்சுளாவும் ஜானகியின் அம்மா இறந்த விஷயத்தை பற்றி அவளது அம்மாவுடன் பேசிகொண்டிருந்தார்.
அம்மா! அந்த ஜானகியின் அம்மா இறந்துட்டாலாம் ,அவள் வாயாலேயே எப்படி என் மாமாவை கல்யாணம் செய்ய சம்மதிக்கமாட்டேன் என்று சொல்லவைத்தேனோ அதேபோல் அவளையும் இந்த ஊரை விட்டே துரத்தனும் சாப்பாடுக்கே கஷ்ட்டப்பட்டாலும் அவ அழகு மட்டும் குறையாம இருக்கா. அவளை இந்த ஊரை விட்டு துரத்தினால்தான் எனக்கு நிம்மதி எனக் கூறினாள்.
அதை கேட்ட மஞ்சுளாவின் தாயார் அடியே மஞ்சுளா அவள எப்படி ஊரைவிட்டு துரத்துவ நம்மளால அது முடியுமா? என கேட்டார்
அதற்கு மஞ்சுளா, அதற்கான காயை நகர்த்த ஆரம்பிச்ச்ட்டேன். அந்த ஜானகி அவங்க மாமா வீட்டில் தானே இருக்கிறா! அவ மாமாவுக்கு ஒரு மகள் இருக்கிறா. அவளுக்கு கல்யாணம் கூடி வந்துருக்கு நம்ம மில்லில் வேலை பார்ப்பதால் அவர் கம்பெனியில் லோன் போட்டு கடன் பெற முயல்கின்ற விஷயத்தை அப்பா என்கிட்டே சொன்னார்.
நான் அப்பாட்ட சொல்லி அவருக்கு சும்மாவே பணம் தருகிறேன் ஆனால் அதற்கு கைமாறாக ஏதாவது காரணத்தை சொல்லி ஜானகியை அவர் வீட்டை விட்டு அனுப்பிடனும்னு சொல்லச் சொன்னேன். ஆனால் அந்த மனுசர் முடியாதுன்னு சொல்லிட்டாரு.
அதன்பிறகு அவரோட பொண்டாட்டியை நான் கோவிலில் பார்த்து கொஞ்சம் நல்லவமாதிரி வேசம்போட்டு ஜானகியால என் புருஷன் என் கூட வாழமாட்டேன்னு சொல்றார். நீங்க எப்படியாவது அவளை உங்க வீட்டை விட்டு அல்லது இந்த ஊரை விட்டு அனுபிட்டீங்கனா உங்க மக கல்யாணத்துக்கு சுலையா ஒரு தொகை கொடுப்பதாக பேரம் பேசினேன். காசப்பார்த்ததும் சரின்னு அந்த பொம்பள சொல்லிடுச்சு என்றாள் .
மஞ்சுளாவின் கொடும் வார்த்தைகளை அறிந்தவர் வேலாயுதம் எப்படியெல்லாம் ஜானகியை நோகடித்து தன்னை மறுக்கும்படி சொல்லவைத்தாளோ! என்று ஜானகிக்காக வருந்த ஆரம்பித்தார். மறுநாள் ஜானகியை நேரில் சந்தித்து அவள் அம்மா இறந்த துக்கம் விசாரித்து அவளை மஞ்சுளா அனுகாதவாறு வேறு ஏதாவது பாதுகாப்பான இடத்தை அவளுக்கு அடையாளம் காண்பித்து அனுப்பவேண்டும் என முடிவெடுத்தார்..
காலை, காரை எடுக்க முருகனை தேடினார் வேலாயுதம். அதனை கண்டு அங்கிருந்த மஞ்சுளா நான் முருகனை காய்கறி வாங்க மார்கெட்டுக்கு அனுப்பியிருகிறேன் கருப்பனை இன்னைக்கு காரை எடுக்க சொலுங்க என்றாள்.
கருப்பன், மஞ்சுளா சேர்த்த வேலையாள். எனவே இல்லை இருக்கட்டும் முருகன் வந்ததும் நான் போகிறேன் என்று வேலாயுதம் பதட்டத்துடன் கூறினார். அவர் அவ்வாறு கூறவும் மஞ்சுளாவிற்கு இவர் ஏதோ போற இடத்தை நான் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு நினைக்கிறார் அப்படி எங்கதான் போகிறார் என்பதை அவருகுத்தேரியாமல் பின்னால்ல் போய் தெரிந்துகொள்ளணும் என முடிவெடுத்தாள்.
முருகன் வந்ததும் ஜானகி வீட்டிற்கு சென்ற வேலாயுதத்தை சிறு தொலைவில் மற்றொரு காரில் மஞ்சுளா பின் தொடர்ந்து வந்தாள்.
----தொடரும்----
{kunena_discuss:1144}