அவள் அவ்வாறு கூறியதும், வேலாயுதம் வேதனையுடன் ஜானகிடம் நான் என்ன தப்பு செஞ்சேன் ஜானகி உன் மேல் உண்மையான காதல் கொண்டது தவறா...? அதை உன்னிடம் நான் கூறியதற்கு நீ மறுத்தததும் உன் வார்த்தையை மீறி உன்னை பார்க்க முடியாமலும் உன்னை மறக்க முடியாமல் தவித்தது தவறா...?, என் அம்மா நான் செத்து விடுவேன் என்று மிரட்டியதும், அவருக்காக மஞ்சுளாவின் கழுத்தில் தாலி கட்டியது தவறா...?
கல்யாணம் முடிந்தபின் உன்னை மறப்பதற்கு கொஞ்சம் அவகாசம் எடுத்ததை கூட புரிந்து கொள்ளாமல், உன்னையும் என்னையும் இணைத்து பேசி உன்னை கேவலபடுத்துவது பொறுக்காமல் அவள் வாயை அடைபதற்காக நீ மனதில் இருந்து நீங்கும் முன் அவளுடன் பேருக்கு இனைந்து வாழ்ந்தது தவறா.....?
அதன் பின்பும் மஞ்சுளாவிற்கு உன் மேல் வன்மம் குறையாமல் உன் அத்தையை கொண்டு உன்னை நடுத்தெருவில் நிறுத்தி ஊரைவிட்டு துரத்த போட்ட பிளானை என் காதில் கேட்டு உனக்கு உதவ வந்தபோது உன்னையும் களங்கப்படுத்தி, அவமானப்படுத்தி என் ஒழுக்கமும் ஊரின் முன் கேள்விக்குறியாக்கி என் மானத்தை கப்பலேற்றி என்னை நடை பிணமாகிய அவள்கூட இனி என்னால் வாழமுடியாது .
இத்தனை நாள் நான் தாலி கட்டிவிட்டேனே என்று பொறுத்துக்கொண்டு அவளுடன் கடமைக்காக வாழ்ந்து கொண்டிருந்த என்னை அவளின் செயலாலேயே அவளை விட்டு தூரமாக அவளே ஆக்கிக்கொண்டாள்.
இப்பொழுது என் வாழ்க்கை உன்னோடு மட்டும்தான் என்று நான் முடிவெடுத்துவிட்டேன். நீ இனி என்னை விட்டு பிரிவதை நினைத்தாலே நான் இல்லாமல் போய்விடுவேன். ஆமாம்! இந்த வீட்டை விட்டோ என்னை விட்டோ நீ போகணும் என்று முடிவெடுத்துவிட்டால் நான் உன்னை தடுக்க மாட்டேன். ஆனால் அதன் பின் நான் உயிருடன் இருக்க மாட்டேன் இது சத்தியம் என கூறி ஜானகியை அவருடன் கட்டிபோட்டார் வேலாயுதம் .
இந்த நிலையில் வேலாயுதத்தின் அம்மாவும் ஊர் பெரியவர்களும் வேலாயுதத்தை எவ்வளவோ அட்வைஸ் செய்தும் ஜானகியை விட்டு பிரிவதற்கு அவர் சம்மதிக்கவே இல்லை.
பிறகு என் மகளுக்கு என்ன பதில் என்று அவரின் சட்டையை பிடித்து கொண்டு கேட்ட வேலாயுதத்தின் தாய் மாமாவிடம் சட்டப்படி நான் மஞ்சுளாவை விவாகரத்து செய்யப்போய்கிறேன். அதற்கு நஷ்ட்ட ஈடாக உங்க மகளின் பெயரில் என் சொத்து முழுவதையும் எழுதிக்கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார் வேலாயுதம்.
பணத்தின் மீது ஆசை இருந்த மஞ்சுளாவின் அப்பா அவரின் பேச்சை கேட்டு யோசனையானார்.
மஞ்சுளாவுக்கு தான் செய்த செயலின் வீரியம் அப்போதுதான் தெரிந்தது. இனி ஜானகியுடன் தான் மோதி வேலாயுதத்தை மீட்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவர் வேலாயுதம் வீட்டில் இல்லாதபோது வந்து ஜானகியை சந்தித்தாள்
அப்பொழுது மஞ்சுளா வயிற்றில் ஒருமாதம் கரு உருவாகியிருந்தது அதனை சொல்லி ஜானகிடம் வேலாயுதத்தை தனக்கு திரும்ப விட்டுக்கொடுத்துவிடு என் கெஞ்சினார்
அதற்கு ஜானகி நான் அவரை விட்டு விலகினால் அவர் இல்லாமல் போய்விடுவேன் என்று சத்தியம் செய்திருக்கிறார். உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா இல்லாமல் ஆக நான் காரணம் ஆகக் கூடாது. அதனால் என்னால் அவரை விட்டு போக முடியாது ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியும் உன்னை அவர் கைவிடாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.
அதேபோல் மஞ்சுளாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை காரணம் காட்டி மஞ்சுளாவை டைவர்ஸ் செய்யவிடாமல் வேலாயுதத்தை தடுத்த ஜானகி அவரை மஞ்சுளாவின் வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார்.
இதையெல்லாம் அழகுநிலாவிடம் சொன்ன ஆதித் என் அம்மா இப்போ ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருப்பதக்கு காரணம் மாதேஷ் என்று சொன்னாரே என் அப்பா. ஆனால் என் அம்மாவின் இதயம் பலவீனமானதுக்கு காரணம் அவன் மட்டும் அல்ல அழகி,
அவங்க ஊரில் இருந்த போது, வெளியில் எங்கு சென்றாலும் முன்னால் அவர்களுடன் சிரித்து பேசினாலும், பின்னால் அடுத்தவ புருசனை கவந்து கொண்ட சண்டாளினு திட்டு வாங்கியபோது கொஞ்சம் வீக் ஆனது அவங்க இதயம்
என் அம்மாவிற்கு நல்லதை செய்கிறேன் என்ற பேரில் என் அம்மாவை தாலி கட்டி அவங்களை சமூகத்தின் முன் குற்றவாளியாக்கிய என் அப்பாவின் செயலில் மீண்டும் அவங்க இதயம் வீக் ஆனது.
அடுத்தவளின் புருசனுடன் வாழ்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியே அவர்களின் இதயத்தை நொறுக்கி மேலும் அவர்கள் இதயத்தை பலவீனமாகியது.
இதெல்லாம் தெரியாமல் என் மேல் உயிரையே வைத்திருந்த என் அம்மாவுடன் பேசாமல் அவங்களை நான் மனதொடித்து அவர்களின் இதயத்தின் ஆயுளை குறைத்தேன்.
இப்படி எல்லோராலும் வஞ்சிக்கப்பட்ட என் அம்மா அவர்களின் பிள்ளையான என்னால், மற்றொரு பெண்ணான உன் கலந்கத்துக்கு காரணமானதைதான் தாங்க முடியாமல் மயங்கி சரிந்தார்கள் அழகி. ஆனால்,