(Reading time: 23 - 45 minutes)

இப்போ உன்னால் தான் அழகி அவங்க எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக வாழ ஆசை படுறாங்க. இதே போல் அவங்களை எப்பவும மகிழ்ச்சியா வைத்திருப்பாயா....! அழகி என கேட்டான்.

அவன் தன்னிடம் அவ்வாறு கேட்டதும் ஜானகிக்காக உருகி நின்ற அழகி இனி அவங்க என் பொறுப்பு ஆதித் இதுவரை வாழ்கையில் துன்பத்தை மட்டும் பார்த்திருந்த ஜானகி அத்தை இனி எதற்காகவும் துன்பப்பட விட மாட்டேன் என்று உணர்ச்சியுடன் கூறினால் அழகி.

அவள் அவ்வாறு கூறியதும் ஆதித்துக்கு அவளின் மேல் காதல் பொங்கியது. வர்ஷாவிடம் அவன் தனது வீட்டை பற்றி கூறியிருந்தான். ஆனால் அப்படி கூறுகையில் அதை இன்பர்மேசனாக மட்டமே கூறியவன் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே காட்டிக்கொண்டான்.

ஆனால் அழகுநிலாவிடம் அவனின் வாழ்கையில் அவன் உணர்ந்த கஷ்ட்ட நஷ்டத்தையும் கூறி ஆதரவு தேடும் குழந்தை போல ஒப்பித்தான்.

அவளும் பார்வையாலும் அவனின் கையை தனக்குள் அடக்கி, உனக்காக நான் இருக்கிறேன் என்று அவனுக்கு அன்னையாக மாறி அவனின் கவலைகளை ஆற்றும் மருந்தானாள். .அத்துடன் இல்லாமல், உன் அம்மாவுக்கும் இனி நான் பொறுப்பு என்று ஏற்றுக்கொண்டது மொத்தமாக அவனை அவளின்பால் வீழ்த்தியது.

ஆனால், அவன் மேல் அன்பு செலுத்திய அழகியோ அதனை உணரவில்லை. அவனின் பள்ளிக்கூட பருவத்தில் அவன் பட்ட கஸ்டத்திலும் அவனின் அம்மாவின் துயரமும் மட்டுமே அவளை பெரிதும் தாக்கியது.

ஆதித்துகு அவளின் மடியில் படுத்து கொண்டு தன காதலியிடம் குழந்தாய் மாறி காயம்பட்ட நெஞ்சை அவள் விரல் கோதலில் ஆற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது நடந்தால் அதன் பின்..... என்று விபரீதமாக அவளின் மேல் தனக்கு ஏற்பட்ட மோக எண்ணமும் அவனை பித்தனாக்கியது

இனி அவளின் அருகில் இருந்தால் விபரீதமாக ஏதாவது செய்து அவளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்ற உணர்வில் வேகமாக எழுந்தவன். தன் சட்டையை போட்டுக்கொண்டு அவளை திரும்பி பார்க்காமல், நான் கதவை வெளியில் லாக்பண்ணிவிட்டு கொஞ்சம் நடந்துவிட்டு வருகிறேன். நீ தூங்கு! என்றவன் வெளியேறிவிட்டான். .

அவ்வளவு நேரம் தன்னிடம் மனம் விட்டு பேசியவன் திடீர் என்று எழுந்து தன முகத்தை பார்க்க கூட விரும்பாமல் வெலியேறியது அவளுக்கு என்னவோ சொல்லமுடியாத வெற்றிடத்தை அவள் மனம் உணர வைத்தது. அவனிடம் நில்லுங்கள் நானும் உங்களோடு வருகிறேன் என்று கூறி கத்த வேண்டும் போல் இருந்தது .

அவனே தன அம்மாவிற்காக அவனின் அம்மாவை நான் புரிந்து நடந்து கொள்வதற்காகவும் தற்போதைய அவனின் வருத்தத்தை பகிர்ந்துகொண்டதை வைத்து அவனின்மேல் தான் அதிக உரிமை எடுத்துக்கொள்வதை விரும்பாமல்தான் இப்படி வெடுக்கென்று வெளியேரினானோ? என்ற எண்ணம் உண்டானது.

அவனின் இந்த சிறு முகத்திருப்பல் கூட தன்னால் தாங்கமுடியவில்லையே! ஏன்? என்று எண்ணியவளுக்கு தான் அவனின் மேல் காதலில் விழுந்துவிட்டோம் என்ற உண்மை புரிந்தது.

அவ்வாறு புரிந்த விஷயம் அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் தன்மேல் காதல் இல்லாத ஒருவன், கடமைக்காக தன்னை மணந்து கொள்ள முடிவெடுத்த ஒருத்தனின் மேல் தனக்கு உண்டான காதலை அவனிடம் இருந்து மறைத்து கொள்ள முடிவெடுத்தாள் .

அப்படியே அந்த சோபாவிலேயே ஒருக்களித்து படுத்தவள் தன்னை அறியாமல் பல குழப்பமான மனநிலையில் உறங்கியும் விட்டாள்.

றுநாள் காலை கண் விழித்த அழகுநிலா தன் முன்னாள் கிளம்பி ரெடியாக நின்ற ஆதித்தை பார்த்தபடி அச்சோ..! லேட்டா எழுந்திரித்துவிட்டோமோ? என கடிகாரத்தை பார்த்தால் அது 10:30 என காட்டியது. இரவு மிகவும் தாமதமாக தூங்கியதாலும் கடந்த இரு தினங்களாக சரியாக தூங்காததாலும் மன உளைச்சலாலும் இன்று அதிகநேரம் தூங்கிவிட்டால் அழகுநிலா, போனில் யாருடனோ பேசிகொண்டிருந்த ஆதித் ஒருநிமிஷம் என்று போனில் பேசிகொண்டிருந்தவரிடம் சொல்லிவிட்டு அழகுநிலவை பார்த்தான்.

இன்று காலை டாக்டர் ஆதித்தின் அம்மாவை பரிசோதித்தவர். குட், ஷி இஸ் பெட்டர் என்றார். அதனைக் கேட்ட ஆதித் மகிழ்ச்சியுடன் அம்மா குணமாய்ட்டங்களா? டாக்டர் என்று கேட்டான். அதற்கு நோ! அவங்க ஹார்ட் வீக் ஆகித்தான் இருக்கு. ஆனால் இங்க அட்மிட் ஆனபோது அவங்க பள்ஸ் ரொம்ப வீக் ஆக இருந்தது. ஆனா இப்போ நார்மலாகி இருக்கிறது. ஐ திங், அவங்க மனசு கொஞ்சம் அமைதியா ஆகியிருப்பதால் நார்மல் ஆனது மாதிரி தெரியலாம். இதே போல் அவங்க மனம் அமைதியா இருக்கிறமாதிரி நீங்க பார்த்துக்கிட்டா இன்னும் கொஞ்ச நாள் அவங்களை உயிரோட வச்சிருக்க முடியும். மருந்து மாத்திரைகளின் உதவியுடன் உங்க பேமிலி சப்போர்ட்டும் இருந்தால் அவங்க ஆயுளை கொஞ்சம் அதிகமாக்கலாம் என்றார்.

அவன் அம்மாவின் ஆயுளை அழகுநிலா கண்டிப்பா அதிகமாக்குவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது. மேலும் தன் வாழ்க்கையில் இத்தனைநாள் இருண்ட பக்கத்தை, அழகியின் வரவு மாற்றி வெளிச்சமாக்கிவிடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவனின் வாய் தன்னை அறியாமலே என் அழகி என்று கூறியது அவனுக்காகவே இறைவன் அவளை அவனிடம் அனுப்பியதாக அவன் எண்ணினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.