(Reading time: 22 - 43 minutes)

அவள் அவ்வாறு கூறவும் நரேனின் பார்வை கோபத்தை கக்கியது மாதேசோ தன நட்பைய் அவள் உதறிவிட்டு போகவும், டேய் உன்னயாருடா இப்போ வந்து அவ கூட பேசச்சொன்னது. இப்போ பாரு! என்கூட பேசமாட்டேனு போறா என்று அவனிடம் கடுப்போடு சொன்னவனின் பார்வையோ போய்கொண்டிருந்த வர்ஷவை பின்தொடர்ந்தது. அவள் வாசல்நோக்கி போவதை உணர்ந்தவன், வேகமாக அவளின் பின்னல் வர்ஷா... வர்ஷா... ப்ளீஸ்...! நில்லுங்க நான் சொல்றதை கேளுங்க என்று ஓடி வந்தவன் கெஞ்சினான். .

தன்னால் அடுத்த அடி எடுத்துவைக்க முடியாமல் வழியை மறைத்தபடி அவன் நின்றதும் சுற்றி உள்ளவர்கள் தங்களை வேடிக்கை பார்ப்பதை பார்த்த வர்ஷா, தனது கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டவள் சற்று ஓரமாக அவனுடன் சென்று லுக் மாதேஷ்.... இப்ப்போ எதுக்கு இப்படி சீன கிரியேட் பண்றீங்க என்றாள்.

உடனே மாதேஷ் சற்று அமைதியானான். ஏன்.. ஏன்... என்று தன மனதினுள்ளேயே கேள்வி கேட்டவன் அவன் பழகிய மற்ற பெண்களை விட அவள் குணத்திலும் செயலிலும் சற்று தனித்திருந்த அவளின் தன்மை அவளின் மேல் தனக்கு ஆர்வத்தை உண்டாகியிருப்பதை உணர்ந்துகொண்டான்.

முதலில் அழகான பெண் என்ற நோக்குடன் அவளை பார்த்து பழக முயன்றான். பின் அவள் ஆதித்தின் காதலி என்று தெரிந்ததும் வேண்டுமென்றே அவளுடன் நெருங்கி பழகி ஆதித் வர்ஷா இருவருக்கும் இடையே பிரச்சனையை உண்டாக்கி ஆதித்தின் நிம்மதியை குலைக்க முயன்றான்.

அவளுடன் நெருங்கி பழகியதும் அவளின் மேல் அவனுக்கே ஆர்வம் வந்ததை புரிந்துகொண்டான். இதுவரை பிளே பாயாக இருந்த மாதேஷ் வர்ஷாவின் இயல்பைக் கண்டு அவளை அவனுடைய வாழ்க்கைத் துணையாக மாற்ற நினைத்தான்.

ஆனால் இப்பொழுது நான் உன்னை விரும்புகிறேன் கல்யாணம் செய்துகொள்ளல்லமா? என்று அவளிடம் கேட்டால் அதனை ஏத்துக்க மாட்டாள் என்று புரிந்தவன், முதலில் தான் அவளின் நம்பிக்கையை பெறவேண்டும் என்று முடிவெடுத்தான்.

வர்ஷா ப்ளீஸ்.... இப்போ என்ன நான் நரேனின் கூட பேசுவது பழகுவதும் உனக்கு பிடிக்கவில்லையா? சரி இனி அவனுடன் குலோசாக நான் பலக மாட்டேன். இப்போ உனக்கு என்மேல் கோபம் போயிடுச்சா? என்று கேட்டான்.

அவன் அவ்வாறு கூறியதும் கூர்மையாக அவனை பார்த்தவாறு ஏன்? எனக்கா ஏன்? நான் ஒன்றும் உங்களுக்கு அவ்வளவு முக்கியமானவள் கிடையாதே! என்று கூறினாள்.

அவள் தன்னிடம் வார்த்தையைபோட்டு உண்மையை வாங்க முயல்வதைப் புரிந்துகொண்டவன், உசார்...மாதேஷ் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டவன்

பிகாஸ் ஐ வான்ட் யுவர் பிரண்ட்ஷிப் வர்ஷா yo,ஐ feel அட்மையர் யுவர் கேரக்டர். ஐ டோன்’ட் வான்ட் லாஸ் யுவர் பிரண்ட்ஷிப். .ப்ளீஸ் பீ பிரண்ட்ஸ் என்றபடி அவளிடம் கைகுலுக்க கை நீட்டினான்.

ஏனோ அவன் அவ்வாறு கூறியதும் அவனிடம் அதற்குமேல் முகம் திருப்ப அவளால் இயலவில்லை. எனவே சிரிப்புடன் அவளும் பிரண்ட்ஸ் என்று கூறியபடி அவனுடன் கை குலுக்கினாள்.

நான் கிளம்புறேன் மாதேஷ். பிறகு பார்க்கலாம் என்று எழுந்தவளை நான் உன்னை ட்ராப் பண்ணவா வர்ஷா? என்று கேட்டபடி அவனும் எழுந்தான்.

ஓகே மாதேஷ் என்று அவள் புன்னகையுடன் கூறியதும் இருவரும் பேசியபடி வெளியேறினர்.

அவ்வாறு பேசிக்கொண்டே வெளியேறிய இருவரையும் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன். டேய்! மாதேஷ்.... என்கிட்டயேவா? இருடா... உனக்கும் அவளுக்கும் வைக்கிறேன் ஆப்பு என்று மனதினுள் கூறிகொண்டான்.

தித் கம்பெனிக்கு சாப்ட்வேர் செய்துகொடுத்த ஜேம்சிடம் கொஞ்ச நாளுக்கு முன் ஆதித் கொண்டுவந்து கொடுத்த மொபைலை அதன் பிங்கர் பிரின்ட் இல்லாமலேயே ஓபன் செய்த ஜேம்ஸ் அதில் இருந்த வீடியோ பதிவுகளில் அழகுநிலாவிற்கு பிரச்சனை கொடுக்கும் அந்த பதிவை டெலிட் செய்வதற்காக பார்த்தபோது அதில் பீச்சில் மால்களில் ரெசார்டில் என பல இடத்தில் அழகிய பெண்கள் ஆடைவிலகிய நேரத்திலும் பொது இடங்களில் தாங்கள் மறைவாக இருப்பதாக எண்ணிக்கொண்டு அநாகரிகமாக நடந்து கொள்ளும் காதலர்களின் வீடியோ பதிவும் மற்றும் பெரிய வீட்டின் கழிசடை கன்றுக்குட்டிகளின் லீலைகளுடன் மந்திரி ஜெயகாந்தன் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த போட்டோகளும் இருந்தது.

அழகுநிலாவின் வீடியோ பதிவை டெலிட் செய்தவன் அதில் அந்த பணக்கார பசங்களின் நடிகையுடனான பதிவையும் அந்த மினிஸ்டரின் லீலைகள் உள்ள போட்டோசும் ஆதித் செல்லுக்கு சென்ட் பண்ணும் போது அதனை ஆதித் அறியாமல் தன்னுடைய செல்லுக்கும் அனுபியிருந்தான் அந்த ஜேம்ஸ்.

அந்த ஜேம்ஸின் தங்கைக்கு அடுத்த வாரம் கல்யாணம், அவன் தங்கைக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளையோடு கடற்கரையில் அமர்ந்திருந்த ஜேம்ஸ் கோபமாக இருந்தான்.

அவன் கோபத்திற்கு காரணம் அவன் தங்கைக்கு நிச்சயித்திருந்த அந்த ஜோசப்பினால்தான் அவன் கம்பனி வேலை விசயமாக பெங்களூர் போயிருந்தவன் இன்றுதான் ஊருக்கு வந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.