“ஹ்ம்ம்.. இருந்தாலும்.. இந்த கால புள்ளைங்க .. ஒரு வார்த்தை முன்ன கேட்டுக்கிறது தான் நல்லது..”
“எனக்கும் அந்த யோசனை இருந்துச்சு.. ஆனாக்க அவங்ககிட்டேர்ந்து தகவல் நேத்துதான் வந்துச்சு.. அதான் சரி நேராவே பாத்துக்கிடலாம்ன்னு விட்டுட்டேன்..”
“ஏன்யா.. அவங்கள நேர்லே பார்த்து பேசி இருக்கியா?”
“இல்லைமா.. இன்னைக்குதான் நேரா பாக்குறோம்.. ரெண்டு தடவை போன்லே பேசினேன்.. “
“பையன் போட்டோ எதுவும் இருக்கா?”
“நான் கேட்டுகிடலை. அவங்க திருப்பி நம்ம பொண்ணு போட்டோ கேட்டா என்ன செய்யறதுன்னு , நேர்லே பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்..”
“எல்லாம் நல்லதுதான்.. என்ன ரெண்டு மருமவளும் இப்போவே மாமியா கனா காண ஆரம்பிசுட்டீகளோ .. போங்க.. போயி கொர வேலைய பாருங்க.. “
இருவரும் முனகி கொண்டே சென்றனர்..
“வள்ளி.. இன்னும் இந்த அத்தை பண்ற அலும்பு குறையவே இல்லை போலவே”
“ஆமாமா.. மதனி.. அவங்கள கொஞ்சம் மிரட்டுறது மலருதான்.. அவளுக்கு மட்டும் தான் சித்த அடங்குவாக “
“சரி. சரி ..வா வேலைய பார்ப்போம்.. “
மலரிடமும், அவள் தங்கை கயலிடமும் எதுவும் சொல்லாமல் அன்று மாலை வீடு தயாராகிக் கொண்டு யுர்ந்தது.
அவர்கள் இருவரும் சற்று நல்ல சேலையே கட்டி இருந்ததால், தலைக்கு இருவருக்கும் நெருக்கமாக தொடுத்தா மல்லிகை பூ மட்டும் கொடுத்து வைத்துக் கொள்ள சொன்னார்கள்.
மாலை ஆகவும் வடிவு ஆச்சி,
“புள்ளைங்களா.. நீங்க ரெண்டு பேரும் சித்த நேரம் மெத்தையிலே இருங்க.. வீட்டுக்கு விருந்தாளிங்க வாராங்க.. கொஞ்சம் பொருத்து உங்கள கூப்பிட்டு அனுப்பறோம்” என
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு மேல் மாடிக்கு சென்றார்கள்.
இவர்கள் எல்லோரும் காத்து இருக்க, செழியன் குடும்பத்தினர் அங்கே வந்தனர்.
முதலில் அவர்களை வாசலில் வரவேற்ற கணேசனை மட்டுமே கண்டவர்கள், சிரித்தபடி உள்ளே வர, அங்கே வேலன் மற்றும் வடிவு ஆச்சி இருவரையும் கண்டதும் திடுக்கிட்டு நின்றனர்.
செழியன் “ஐயோ.. இது என்ன புது குழப்பம்..? கடவுளே நான் இப்போ எப்படி ரியாக்ட் செய்யுறதுன்னு தெரியலையே.. யோவ்.. முருகா.. என்ன இப்படி கோத்து விட்டு வேடிக்கை பார்கறியே.. இது நியாயமா?” என்று மனதுக்குள் புலம்ப, அவன் கண்களோ இந்த ரணகலத்துலேயும் தன் விழி டார்லிங் இங்கேதான் வந்துருக்களா என்று குதூகலம் தேடியது.
தொடரும்!
{kunena_discuss:1126}