(Reading time: 21 - 41 minutes)

அதில் இருந்த அவளின் உடைகள் அனைத்தும் ஆபீஸ் போடுவதற்கு ஏற்றது போல் இருந்தனவே தவிர ஹை சொசைட்டி பார்டிக்கு உடுத்திபோகும் அளவு டாம்பீகமாக எதுவும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை

எனவே அவளின் கை பிடித்து இழுத்தபடி வா என்று கூறியபடி வேகமாக இழுத்து வெளியில் வந்தவன் காரின் முன் கதவை திறந்தான்

எங்கே என்று கேளாமல் அவளும் உள்ளே அமர்ந்தால் ட்ரைவர் இருக்கையில் வந்து அமர்ந்தவன் அதன் பின் அவளிடம் எதுவும் முகம் கொடுத்து பேசவில்லை அவனின் முகம் தீவிரமான யோசனையில் இருந்தது

கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பார்த்த அழகுநிலாவிற்கு அவனின் பாராமுகம் மூச்சை அடைக்கும் அளவு அவளுக்கு அழுத்தத்தை கொடுத்தது.

அதை தாங்க முடியாமல் அவளே அவனை என்னங்க..என்று மெதுவாக கூப்பிட்டாள். அவள் கூப்பிட்டது கேட்டதும் அவளின் புறம் திரும்பி மட்டும் பார்த்தான் என்ன என்று கேட்கவில்லை.

அவனின் பார்வையை கண்டவள் என்ன என்று கேட்டா வாயில இருந்து முத்தா உதிர்ந்திடும் என்று முனுமுனுத்தவள் ஹாஸ்பிட்டலா போறோம் என்று கேட்டாள்.

உடனே ஏன்? எங்கேன்னு சொன்னாத்தான் என் கூட வருவியோ? உன்னை கடத்திட்டு போய் கசமுசா பண்றதுக்கு நான் என்ன வில்லனா? என்று கேட்டான்.

அவனின் நக்கல் கலந்த அடாவடியான பேச்சை கேட்டவளின் இதழில் புன்னகை அரும்பியது .உங்களை வில்லன் என்று கைப்பில்லைகூட சொல்லாது பக்கா ஹீரோ சார் நீங்க என்றாள்.

அவள் தன்னை ஹீரோ என்று சொன்னதால் உள்ளம் ஜில் என்று ஆனது ஆதித்துக்கு ஆனால் அதனுடன் சார் என்று தன்னை சொன்னதும அதை பிடித்துகொண்டவன் சண்டைக்கு கிளம்பினான் அவளுடன்

என்னது சாரா? புருசன்கிற நெனப்பு இருந்துச்சுனா அப்படி சொல்வியா? உன்னயெல்லாம் ஒன்னும் செய்யாம விட்டுவச்சுருக்கிறதுனாலதான் என்னை பார்த்து சார்னு உனக்கு சொல்லத்தோணுது என்று எகிறினான்.

அவன் அவ்வாறு சொன்னதும் நான் எதார்த்தமா சொல்றதை கூட இப்படி குண்டக்கமண்டக்க நீங்க யோசிச்சு பேசினா நான் என்ன பண்றது ஆதித். . நான் காலையில் இருந்து என்ன பேசினாலும் நீங்க கடைசியில் இந்த பேச்சிலேயே வந்து முடிக்கிறீங்க உங்களை நான் மனதில் உயர்ந்த இடத்தில் வச்சிருக்கிறேன் ஆதித் நீங்க போய் இப்படி பேசலாமா என்று கேட்டாள் அழகுநிலா .

அவள் கூறியதும், உன்னிடம் இருந்து நான் நன்றிக்கடனையோ நல்லவன்ற பட்டத்தையோ நான் விரும்பல, நான் உன்னை என் பொண்டாட்டியா பார்க்கத்தான் ஆசைபடுறேன் நீயும் அதே போல் புருசன்ற நினைப்பில் என்னிடம் நடந்து கொள்வதை மட்டும்தான் நான் விரும்புறேன் என்று கூறினான் ஆதித்

இங்கேதான் ஆதித் தவறு செய்தான், காதல் இல்லாமல் கடமைக்காக தன்னுடன் அவன் வாழ்வதை அழகுநிலா விரும்பவில்லை. , அவன் அவளிடம் காதலை கேட்டிருந்தால் ஒருவேளை அவனின் மீது உள்ள அவளின் காதல் வெளிவந்திருக்கும் .ஆனால் அவன் மனைவி என்ற முறையில் கடமையாக அவளை ஆதித் நெருங்க முயல்வதாக நினைத்த அழகுநிலா உள்ளம் சுணங்கியது

அவளின் முகச்சினுக்கத்தை பார்த்தவன் அதன் பின் எதுவும் பேசாமல் காரை வேகமாக செலுத்தினான் கார் ஒரு பொட்டிங்சின் முன் நின்றது அது வி ஐ பி களுக்கு என்று தனியாக டிசைன் செய்து உடை வடிமைத்து கொடுக்கும் ஒரு பிரபல ட்ரெஸ் டிசைனரான டாம்போவின் ஷாப், அங்கு அவன் ஏற்கனவே வர்ஷவுடன் வந்து அவளுக்கு உடை வாங்கி கொடுத்திருக்கிறான்.

கார் நின்றதும் இறங்கு என்று கூறியபடி ஆதித் ட்ரைவர் இருக்கையில் இருந்து இறங்கியதும் அவனின் முன் வேகமாக ஓடிவந்தான் ஹோஸ்பிடலில் அழகுநிலா பார்த்த பார்டிகார்ட் ஆசாமி . அவனிடம் கார் கீயை ஆதித் கொடுத்ததும் அவன் காரை பார்க் செய்வதற்காக காரில் ஏறினான். இந்த பார்டிகார்ட் ஆசாமி எங்கிருந்து வந்தான் இன்னுமா இவர் எனக்கு பாதுகாப்புக்கு ஆள போட்டுருக்கிறார் என்று யோசித்துக்கொண்டே படியில் ஏறும்போது கவனக்குறைவாக அவள் படியில் கால்வைத்து தடுமாறிய நேரம் அருகில் இருந்த ஆதித் அவளை ஏய பார்த்து என்று பிடித்தவன் அவள் கையோடு தன் கையை கோர்த்து பிடித்தபடி உள்ளே நுழைந்தான்.

ஆதித் அழகுநிலாவிற்கு நிழலாக ஓர் காவல் வளையத்தை ஏற்பாடு செய்திருந்தான் அதை அழகுநிலா தொந்தரவாக நினைக்காதவகையில் சற்று தூரத்தில் இருந்து மற்றவர்கள் கவனிக்காதவகையில் சிறப்பாக செய்பவர்களை நியமித்து இருந்தான் ஆதித்.

அழகுநிலா தடுமாறவும் ஆதித் வேகமாக அவளின் கைபிடித்ததும் விழாமல் சமாளித்துக்கொள்ள அழகுநிலாவும் ஆதித்தின் கையை இறுகி பிடித்து தன்னை நிலை நிறுத்திகொண்டாள்.

கடையின் உள் அழங்காரத்தையும் அங்கிருந்த விதவிதமான டிசைன்களில் பொம்மைகளுக்கு உடுத்தியிருந்த உடைகளையும் வேடிக்கை பார்த்தபடி அவனின் கைப்பற்றி நடப்பதை உணராமலே அவனுடன் இணைந்து நடந்தாள் அழகுநிலா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.