ஏனெனில் அவள் காலையில் இருந்து தன்னை தவிர்ப்பதை பார்த்தவன் மனம் சற்று கலங்கித்தான் போய்விட்டது. நேற்று அவள் வருத்தத்தில் இருந்ததால் தன் தொடுகையை அவள் ஆறுதலுக்காக ஏற்றால் போலும் மற்றபடி அவனின் அருகாமையை அவள் விரும்பவில்லையோ! என்ற கலக்கம் அவனுக்கு சிறிது ஏற்பட்டிருந்தது
தன் தொடுகை அவளுக்கு வெறுப்பை கொடுக்கிறதோ என்ற ஐயம் தெளிந்து கொள்ளவே இன்று அவளை தொட்டுத்தொட்டு பேச ஆரம்பித்தான் ஆனால் அவளின் முகச்சிவப்பும் வெட்கமும் பார்த்த ஆதித் அவளும தன்னை விரும்பத்தான் செய்கிறாள். ஆனால் அதை அவள் ஏனோ மனக்குழப்பத்தில் தன்னிடம் வெளிகாண்பிக்காமல் மறைகிறாள் என்பதை உணர்ந்து கொண்டான்.
மலர்ந்த முகத்துடனும் கனவு மிதந்த விழிகளுடனும் ஹாஸ்பிடளுக்கு வந்த ஆதித் மற்றும் அழகுநிலாவை கண்ட ஜானகியின் முகம் சந்தோசத்தில் பூரித்தது. அங்கிருந்த டிவியில் நேற்று நடந்த அவர்களின் கல்யாணத்தை திரும்பத்திரும்ப போடச்சொல்லி பார்த்து கொண்டிருந்த ஜானகி அதில் இருவரின் ஜோடிபொருத்தத்தை பற்றி வாய் ஓயாமல் சொல்லிகொண்டிருந்தாள்.
அப்பொழுது வேலாயுதத்துடன் வந்த டாக்டர் ஆதித்திடம் நாளை உங்க அம்மாவை நீங்க டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கூப்பிட்டுகொண்டு போகலாம், நேற்றிலிருந்து உங்க அம்மா வீட்டுக்கு போகணும் என் மருமக வந்துட்டா அவகூட இருக்கணும் என்னை வீட்டுக்கு அனுப்புங்க டாக்டர் என்று என்னிடமும் ட்யூட்டிக்கு வந்திருக்கிற நர்சிடமும் திரும்பத்திரும்ப சொல்லிகிட்டே இருக்காங்க
இப்போ அவங்க மனசை அமைதியா வச்சிருக்கணும் என்பதால் அவங்களை வீட்டிற்கு அனுப்பித்தான் ஆகணும். ஆனால் கூட ஒரு நர்சையும் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் அவங்க கிட்ட இருந்து அவங்க நிலைமையை பார்த்து அதற்கு ஏற்றாற்போல் மருந்து கொடுப்பார்கள் மிஸ்டர் ஆதித்.
அவங்களை கண்ணாடி பாத்திரம் போல் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியவர் வேலாயுதத்திடமும் ஜானகியை எவ்வாறு பர்த்துகொள்ளவேண்டும் என்று சில பல அறிவுரைகள் சொல்லிவிட்டுச்சென்றார்.
வீட்டிற்கு போகலாம் என்று சொன்ன உடனேயே ஜானகியின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி பொங்கியது. தன வீட்டில் தன மருமகளாய் அழ்குநிலாவுடன் வாழபோகும் வாழ்க்கையை நினைத்த ஜானகிக்கு சந்தோசமாக இருந்தது.
அபொழுது மணியை பார்த்த வேலாயுதம் ஆதித்திடம் மிஸ்டர் குப்தா அவருடைய பிறந்த நாள் பார்ட்டிக்கு உன்னையும் மருமகளையும் ஸ்பெசல் கெஸ்ட்டாக இன்வைட் செய்திருப்பதாக என்னிடம் கூறினார் ஆதித். ஆனா இரண்டு பேரும் பார்டிக்கு கிளம்பாமல் இருகிறீங்க என்று கேட்டார்.
யா..., போகனும்பா இதோ ட்ரெஸ் எல்லாம் இப்போதான் பர்சேஸ் செய்திட்டு வந்திருக்கிறோம். இங்கிருக்க ரூமில் சேன்ஜ் பண்ணிட்டு கிளம்பிடறோம். நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க நாளைக்கு வீட்டிற்கு கூப்பிட்டுப் போக நான் காலையில் வந்துடுறேன் என்றவன் அழகுநிலாவுடன் சேர்த்து ஜானகியிடம் விடை பெற்று அங்கிருந்த அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டதும், ஆதித் அவளை ப்யூடிபார்லருக்கு கூட்டிபோனான் அங்கு அவளுக்கு அளவான மேக்கப்புடன அப்சரஸ்சாக வெளிவந்த அவளை பார்த்த ஆதித்தோ கிரங்கி நின்றான்
அந்த பார்டி காலில் நுழைந்த இருவருக்கும் நியூ கபுள்ஸ் என்ற முறையில் வரவேற்ப்பு பலமாக இருந்தது. புது உடை மற்றும் நகையில் அழகாக ஜொலித்த அழ்குநிலாவின் மேல் இருந்து பார்வையை ஆதித்தால் அகற்றவே முடியவில்லை.
ஆதித் பார்ட்டிக்கு அழகுநிலாவுடன் வருவாள் என்பதை தெரிந்து கொண்ட வர்ஷா அந்த பார்டியில் தான் மிகவும் அழகாக தெரியவேண்டும் என்னை பார்த்தபின் எவ்வளவு பெரிய அழகியை இழந்திருக்கிறோம் என்ற என்னத்தை ஆதித்துக்கு வரவைக்க வேண்டும் என்ற நினைப்பில் தன்னை சிரத்தை எடுத்து அழகாக்கிக்கொண்டு அந்த பார்டிக்கு வந்திருந்தாள் வர்ஷா.
ஆனால் வந்த பின் ஏன் இந்த பார்டிக்கு வந்தோம் என்று மனம் புளுங்க ஆரம்பித்தாள் வர்ஷா. ஏனெனில் ஆதித் அவளை திரும்பியும் பார்க்வில்லை அவன் அழகுநிலாவுடன் ஜோடியாக கைகள் கோர்த்து காதல் ததும்ப நிலாவை அனைத்து இணைந்து நடந்து வந்ததை பார்த்தவளுக்கு அழுகை வெடித்தது.
அழ்குநிலாவிற்கு அந்த பார்டி ஹாலில் வர்ஷவை பார்பதற்கு முன் இருந்த ஆதித்தின் மீதான மயக்கமெல்லாம் அவளை பார்த்தப்பின் அடியோடு மாறிவிட்டது. வர்ஷாவின் அழகு ஆதித்தை பாதிக்கவில்லை ஆனால் அழகுநிலாவை பாதித்தது அவளுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக ஆரம்பித்தது.
அங்கிருந்த ஆடம்பரமும் அவர்களின் வாழ்க்கை முறையும் அங்கிருந்தவர்களின் பகட்டும் அவளுக்கு புதிது. எனவே அந்த சூழ்நிலை அவளை மிரட்டியது.
அந்த பார்டிக்கு மாதேசும் வந்திருந்தான் அவன் கண்கள் வர்ஷாவிடமே சென்றது. அவளுடைய வருத்தம் தோய்ந்த முகம் அவனுக்கு கவலை கொடுத்தது அவளை அந்த வருத்தத்தில் இருந்து மீட்கவேண்டும் என்று அவளையே பார்த்திருந்தான்.
இதுவரை அது போன்ற பார்டிகளில் மதுவை தொட்டுபார்க்காத வர்ஷா, ஆதித்தை தன்னை பார்த்து ஏங்கவைக்க நினைத்த வர்ஷா, ஆதித்தை ஜோடியாக அழகுநிலவுடன் பார்த்தபின் மனம் உடைந்துவிட்டாள். ஆதித்தை இழந்ததின் கணம் தாங்காமல் கண்ணில் நீர் கோர்த்து கொண்டது. எனவே அந்த அழுத்தத்தில் இருந்து தன்னை மீட்க்க அங்கு டிரேயில் மது கோப்பையை அடுக்கிவைத்து தன அருகில் கொண்டுவந்த பணியாளனின் தட்டில் இருந்த மதுகோப்பையை கையில் எடுத்துகொண்டு ஒரே மடக்காக அவள் குடிக்க ஆரம்பித்தாள்.