அவன் கேட்ட மறுநிமிடம் சாரி... மாதேஷ் என்னால் இப்பொழுது வேறு ஒரு காதல் கல்யாணம் எல்லாம் நினைத்துக் கூட பார்க்கும் நிலையில் இப்போ நான் இல்லை. நான் ஆதித்தை காதல் செய்து கொண்டிருக்கும் போது அவரை விரும்புகிறேன் அவர் எனக்கு கணவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டும் தான் நினைத்திருந்தேன்.
அவர் எனக்கு இனி கிடைக்க மாட்டார் என்பது தெரிந்த பின்னால்தான் அவரை என்னால் மறக்க முடியாத அளவு எனக்குள் அவர் பதிந்திருக்கிறார் என்பதையே நான் புரிந்து கொண்டேன்.
நான் அப்ராட் போகப்போறேன், ஆதித் சம்பந்தமான எதையும் ஆதித்தை நியாபகப்படுத்தும் எதையும் நான் என் வாழ்நாள் முழுவதுவும் இனி சந்திக்க விரும்பவில்லை
உங்களின் தம்பியினை காதலித்து விட்டு அவரின் அண்ணனான உங்களை நான் கல்யாணம் செய்ய எப்படி முடியும்? ஆதித்தை நியாபகப்படுத்தும் எதையுமே இனி பார்க்காத இடத்துக்கு செல்லவிரும்பும் நான் எப்படி அவரின் அண்ணனான உங்களை கல்யாணம் செய்ய முடியும்? குட் பை மாதேஷ். நான் இந்தியாவை விட்டே போகிறேன். ஆதித்தை இனி நேரில் பார்த்தால் அவனின் இழப்பு என்னை பாதிக்காது என்று எனக்கு என்று தோன்றுகிறதோ! அன்றுதான் நான் மறுபடி இந்தியாவருவேன் பை.. என்றவள் விறுவிறுவென்று வெளியேறிவிட்டாள்.
வர்ஷா வெளியேறுவதைப் பார்த்த அழகுநிலா அதித்திடம் ரெஸ்ட் ரூம் போவதாக கூறிவிட்டு அவளிடம் பேசி தான் ஆதித்தை அவளுக்கு விடுத்தருவதாக கூறவேண்டும் என்பதற்காக ஆதித்திற்கு தெரியாமல் வாசலுக்கு அவளின் பின் வந்தவள் மாதேஷ் வர்ஷவுடன் பேசிகொண்டிருப்பதை பார்த்தவள் அவன் சென்றபிறகு அவளுடன் பேச முயலலாம் என்று தூணின் மறைவில் நின்றவளின் காதில் இருவரும் பேசிகொண்டிருந்தது தெள்ளத்தெளிவாக விழுந்தது.
மாதேஷ் காதலை சொன்ன விதமும் அதனை வர்ஷா மறுத்த விதமும் கேட்டவளின் நெஞ்சில் பெரும் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது. மாதேசிடம் பேசிவிட்டு வர்ஷா போவதை அறிந்து அவள் பின்னால் ஓடப்பார்த்த அழகுநிலாவின் கையை அவளின் பின்னல் நின்றுகொண்டிருந்த ஆதித்தின் கரம் கெட்டியாக பிடித்து மேலும் அவள் முன்னேறி போகாமல் தடுத்தது.
அதித்தை அங்கே எதிர்பார்க்காத அழகி ஒருநிமிடம் அதிர்ந்து நின்றாள். ஆதித் பல்லை கடித்துக்கொண்டு ரெஸ்ட்ரூம் போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு இங்க எதுக்கு தனியா வந்து நிக்குற? என்று கோபத்துடன் கேட்டான்.
அது வந்து வர்ஷா, மாதேஷ் என்று திக்கித்திணறி அவனின் கோபமுகத்தை கண்டு பேசமுடியாமல் பிதற்றியவளை கூர்மையான பார்வை பார்த்த ஆதித். இங்க பாரு இந்த ஜென்மத்தில் நீதான் எனக்கு பொண்டாட்டி... நான்தான் உனக்கு புருஷன்... காதல் தோற்கலாம், ஆனால் கல்யாணம் தோற்கக் கூடாது.... அப்படி தோற்றால் அதனால் பாதிக்கப் படுவது என் சந்ததியினரே! அதற்கு உதாரணம். நான்! என் அப்பாவின் இரண்டு கல்யாணத்தால் பாதிக்கப்பட்டவான் நான்!. இந்த நிலைமை என் பிள்ளைகளுக்கு வர விடமாட்டேன், என் வாழ்கையில் கல்யாணம் என்பது ஒருதடவை ஒருத்தியுடனே. அது எனக்கு உன்னுடன் முடிந்துவிட்டது. என் உயிர் உள்ளவரை இன்னொருத்தியை இனி நான் மனைவியாக நினைத்துகூட பார்க்க மாட்டேன். இனி ஒருதடவை என்னை சந்தேகப்படுவது போன்ற உன் நடவடிக்கை இருக்ககூடாது அழகுநிலா என்று கூறினான்.
----தொடரும்----
{kunena_discuss:1144}