அவள் உதடுகளின் மீது தன உதட்டை பொருத்தி இருந்த சூர்யாவோ, அழுகையை நிறுத்த கொடுத்த முத்தம் என்பதை மறந்து அவள் உதட்டை சுவைக்கவே ஆரம்பித்து விட்டான்.
அவன் யாரையும் காதலித்து இல்லை தான். ஆனால் ஒரு ஆண்மகனாக தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தை பற்றி கூட யோசிக்காம இருந்திருப்பானா? இன்று அதுக்கு கிடைத்திருக்க வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டான்.
இத்தனை வருடம் கழித்து கிடைத்த தவம் போல, உதடுகளை விடாமல் உதடுகளால் பற்றி கொண்டான்.
உயிர் வரை உணர்ந்த இந்த தீண்டலில் கரைந்து போனாள் கலைமதி. அவளுடைய அடி வயிற்றில் ஒரு பிரளையத்தையே உணர்ந்தாள் கலைமதி.
அவள் கைகள் அவன் டீ சர்ட்டை இறுக பற்றி கொண்டது.
முதல் முறை ஒரு ஆண் தொடும் போது பெண்ணின் உணர்வுகள் அவனை விலக்கும் தான். ஆனால் அதை செய்யாமல் இருந்தாள் மதி. அவள் தான் இந்த முதல் முத்தத்தை ரசித்து கொண்டிருந்தாளே.
அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராததால், அவள் உதட்டை விடாமலே சொருகும் விழிகளை திறந்து அவள் முகத்தை பார்த்தான். அவள் கண்களை இறுக்கமாக மூடி இருந்ததையும், அவள் கைகள் டிஷர்ட்டில் இறுக்கமாக பிடித்திருந்ததையும் பார்த்தவன், அவளுக்கும் இந்த முத்தம் பிடித்திருக்கிறது என்று நினைத்து உதடுகளை விடாமல் கவ்வி கொண்டான்.
அவனுக்கே மூச்சு விட கஷ்டமாக இருக்கும் போது, தான் அவளை விட்டு விலகியவன் அவள் முகத்தை பார்த்தான்.
அப்போதும் கண்களை மூடி மெய் மறந்து இருந்தாள் கலைமதி.
அதை பார்த்து கட்டு படுத்த முடியாதவனாய் மறுபடியும் அவள் முகம் நோக்கி குனிந்து முத்தமிட்டான்.
இடைவெளி விட்டு விட்டு மீண்டும் மீண்டும் அவள் உதடுகளை சிறை செய்தான் சூர்யா. அந்த முத்தத்தில் அமிழ்ந்து போனாள் மதி.
அவள் கன்னத்தில் பதிந்திருந்த அவனுடைய கை எப்போது அவள் இடுப்புக்கு போனது என்று அறியாமல் இருந்தான் சூர்யா.
அவன் கை அவள் இடுப்பை இறுக்கி பிடித்திருந்தது. அவன் இடுப்பில் கொடுத்த அழுத்தத்துக்கு குறையாத அழுத்தத்தை அவள் அவனுடைய டிஷர்ட்டுக்கு கொடுத்தாள்.
இடுப்பில் இருந்த கையை மேலே கொண்டு போ என்று மூளை கட்டளை இடும் போது தான் சுயநினைவுக்கே வந்தான் சூர்யா.
மெதுவாக அவள் முகத்தில் இருந்து விலகியவன் "சே நான் என்ன செய்ய பாத்தேன்? இப்ப அங்க அங்க எல்லாம் கை வச்சிருந்தா என்னை பத்தி கலை என்ன நினைச்சிருப்பா? அது எல்லாம் அவளுக்கு தெரியுமோ என்னவோ? படிச்சிட்டு இருக்குற சின்ன பொண்ணை போய்? அதுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கே", என்று தன்னையே திட்டினான்.
இப்போது அவன் கை கன்னத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது.
முத்தம் மறுபடியும் நடக்கும் என்று கலை நினைத்து கொண்டிருக்கும் போதே அது நிகழாததால் கண்களை திறந்து அவனை பார்த்தாள்.
ஒரு சிரிப்புடன் அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தான் சூர்யா.
அவள் சிரிப்பில் அழகாக வெக்க பட்டு தலைகுனிந்தாள் கலைமதி.
அவள் நாடியில் கை வைத்து முகத்தை நிமிர்த்தியவன் சிவந்து போய் இருந்த அவள் உதடுகளை விரலால் வருடி விட்டு "சாரி கலை பல்லு பட்டுருச்சு. வலிக்குதா?", என்று கேட்டான்.
அவன் முகத்தை பார்க்க சக்தி இல்லாமல் இல்லை என்னும் விதமாய் தலை அசைத்தாள்.
சிவந்திருந்தவளை ஆசையாக பார்த்தவன் தன்னை நோக்கி இழுத்து கட்டி கொண்டான்.
அவளும் வாகாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
இளைப்பாற அவளுக்கென்று கிடைத்திருக்கும் முதல் இடம். சந்தோஷத்தில் அவள் கண்ணில் வந்த கண்ணீர் அவன் கையில் பட்டு தெறித்தது.
"நாம இப்ப வாழுறது நம்ம வாழ்க்கை கலை. இதில் உங்க சித்தி, எனக்கு அத்தைனு சொல்லவே பிடிக்கலை. அவங்க நம்ம வாழ்க்கையில வர முடியாது. எப்ப இந்த கயிறை உன் கழுத்தில் கட்டினேனோ அப்பவே ஏழேழு ஜென்மத்துக்கும் நீ தான் என் பொண்டாட்டி. உன்னை விட்டுட்டு யாரையும் திரும்பி பாக்க மாட்டேன்.