"கம்மல் சின்னதா போட்டுருக்கா. அதனால புது கம்மலும் ஒரு ஜோடி வாங்கிரு. வளையல், அப்புறம் ஒரு நெக்லஸ், ஒரு செயின், அப்புறம் அவ காலேஜ்க்கு போடுறதுக்கு ஒரு சின்ன செயின். இதுக்கு மேல இனி பியூச்சர்ல வாங்கி கொடுத்துக்கோ. இப்ப அது போதும். ஆனா இதுக்கே அவ வேண்டாம் வேண்டாம்னு சொல்லி உன் உயிரை வாங்க போறா", என்று சிரித்தாள் மங்களம்.
"ஹ்ம்ம், வேணும்னா நீங்க ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வந்துறீங்களா மா?"
"காலேஜ்க்கு மட்டும் தான டா அவ கூட வெளிய போற? கடைக்கும் கூட்டிட்டு போ. அப்படியே வெளிய எங்கயாவது கூட்டிட்டு போ"
"ஹ்ம்ம் சரி மா. இப்ப கிளம்பட்டுமா?"
"ஹ்ம்ம் சரி கிளம்பு. அப்புறம் அப்பாவோட ஏ. டி. எம் கார்டையும் வாங்கிட்டு போ"
"என்னோடதுல பணம் இருக்கே மா"
"முன்ன பின்ன ஆகும் டா. வாங்கிட்டு போ. இரு எடுத்து தரேன்", என்று கொடுத்தார்.
சந்தோசமாக அம்மாவிடம் சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குள் நுழைய போனவன் திகைத்தான். அங்கே கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் கலைமதி. அவள் பக்கத்தில் நின்று திட்டி கொண்டிருந்தாள் வள்ளி.
அடுத்த நொடி "அம்மா", என்று அலறினான் சூர்யா. கோபத்தில் அவன் முகம் ரத்தமென சிவந்திருந்தது.
"என்ன ஆச்சு சூர்யா?", என்று பதட்டத்துடன் ஓடி வந்தாள் மங்களம்.
ஹாலில் இருந்த பாட்டி, தாத்தா, ரகுவும் கூட அவன் கத்தலில் அங்கு வந்து விட்டார்கள்.
தித்திப்பு தொடரும்......
{kunena_discuss:1169}