சரயூவிடமிருந்து நடந்தை அறிந்திட எடுத்த முயற்சிகள் தோல்வியை தழுவியிருக்க...இவளும் சொல்லாது போனால்? மனைவிக்காக கம்பீரத்தை விட்டு கெஞ்சினான்.
கனிவு வந்து ஒட்டிகொள்ள, “உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமாயிருக்கு ஜெய்! ஆனா உண்மையை நம்பமாட்டனு நீங்க அடம் பிடிச்சா நானும் தான் என்ன செய்ய முடியும்?” என்றாள் வருத்தமாக...
“ப்ச்... திரும்ப திரும்ப அதே பொய்யை சொல்லாத யஷ்விதா!” என்றவன், “சரி! நீ சொன்னதே உண்மைனாலும், அதை பத்தி உனக்கு என்னவெல்லா தெரியுமோ அதை சொல்லு...” என்றவனிடம் அத்தனை இறுக்கமிருந்தது.
“எனக்கெதுவும் தெரியாது ஜெய்! அந்த பைத்தியக்காரிக்கு கூட நடந்தது என்னன்னு இப்போ தெரியுமோ தெரியாதோ?”
“சரூவை அப்படி சொல்லாதே ப்ளீஸ்! அவள் படுற கஷ்டத்தை பார்க்க முடியல. எப்படியிருந்தவ தெரியுமா? தைரியம்னா என்னன்னு அவகிட்ட கத்துக்கனும்னு, எங்க காலேஜ்ல நிறைய பொண்ணுங்க பேசிப்பாங்க. அப்படியிருந்தவ இன்னைக்கு எதுக்கெடுத்தாலும் பயப்படுறா! என்னை, ரூபினையெல்லா பார்த்து கூட பயப்படுறா. முன்ன பின்ன தெரியாதவங்கிட்ட கூட பட்டாசு போல படபடக்க பேசுறவ, இப்போ யாருட்டயும் பேசாம அமைதியாவே இருக்கா. வீட்லயே அடைஞ்சு கிடக்குறாளேனே, ஒரு மாறுதல் கிடைக்கும்னு வற்புறுத்தி வெளிய கூட்டிக்கிட்டு போயிக்கூட எந்த பிரயோசனுமும் இல்லை. நீ சொல்ல போறத வச்சுதா சரயூவை எப்படி பழைய மாதிரி மாத்துறதுனு யோசிக்கனும். ப்ளீஸ்! உனக்கு தெரிஞ்சதை சொல்லு யஷ்விதா!” வேதனை வழிய பேசியவனை உற்று பார்த்தவள்....
இரக்கமில்லாது, “சரி! உங்களுக்கு அவளை பழைய சரயூவா மாத்தனும்...ஆனா அதனால எனக்கென்ன லாபம்?” என்று கேட்க....
இத்தனை நேரம் உண்மையை சொல்லிவிட்டதாகவும், அவளுக்கு வேறேதும் தெரியாதென்றும் சொன்னவள், இப்படி பேசவும், மனைவிக்காக எதையும் செய்ய தயாராக இருந்தவன்,
“உனக்கு என்ன வேணும்னாலும் கேளு, நான் தரேன்....தயவுசெய்து அன்னைக்கு என்ன நடந்ததுனு சொல்லிடு!”
கோயிலில் பார்த்த அதே பார்வையை அவள் விழிகள் தாங்கியிருக்க, “என்னவேணாலும் தருவீங்களா ஜெய்?”
“கண்டிப்பா! உனக்கு என்ன வேணும்? பணம், நகை, கார், பங்களா இல்லைனா என்னோட மொத்த சொத்தை கூட தர நான் தயாரா இருக்க யஷ்விதா” என்றான் திடமாக.
அதை மெச்சியவள், “உங்க கையால தங்கத்தாலி வேணும்! உங்க வாயால உங்க மனைவினு சொல்ற வார்த்தை வேணும்! உங்க கண்களில் எனக்கான காதல் வேணும்! உங்க வீட்டோட எஜமானிங்குற ஸ்தானம் வேணும்! எல்லாத்துக்கும் மேல உங்க மனசுல இந்த யஷ்விதா மட்டும் குடியிருக்க இடம் வேணும்! மொத்தத்துல எனக்கு நீங்க வேணும் ஜெய்!”
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}