(Reading time: 22 - 44 minutes)

உங்க அண்ணாவ தான் எனக்கு புடிக்கல, உனக்கும் உங்க அண்ணாவ தான் புடிக்கம போகணும். அதை விட்டுடு எங்க அக்காவ சொல்ற. ஒழுங்கா அவளுக்கு மரியாதையை கொடு என்னதான் நீ எனக்கு க்ளோஸ் பிரெண்டா இருந்தாலும் எப்பவும் எங்க அக்காக்கு அப்புறம் தான்” என்றாள் சண்டைக்கோழியாக.

இததான் நான் எதிர்பார்த்தேன் என்பது போல அவளுடன் சண்டைபோட்டே அவளே மாற்றினாள். அவர்கள் பெற்றோர்கள் வரும்வரை. மதுமிதாவும் நித்யாவும் மிகவும் நெருக்கமான தோழிகள் அதனாலே அவளை டைவேர்ட் செய்வதில் வெற்றி அடைந்தாள்.

ஹரிஷின் படுக்கையறை:

ங்கே இருவரும் மிகுந்த நாளைக்கு அப்புறம் நல்லா உறக்கத்தில் இருந்தனர். மாலையாயும் இருவரும் எழுந்திருக்காமால் இருப்பதனால் எவ்வாறு எழுப்பவது என்று கையை பிசைந்துக் கொன்டிருந்தார் சுமதி.

அவர் பதட்டமாக இருப்பதை அறிந்து, அப்பொழுது தான் ஜோசியரைப் பார்த்துவிட்டு வந்த சிதம்பரம், “என்ன சுமதி ஏதும் பிரச்சனைய? “ என்றார்.

அப்பொழுது அங்குவந்த பிரவீன் அவர் கேட்டதும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான். அதைப் பார்த்த சுமதி, “டேய் ! வாய முடற, நானே என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கான். இதுல இவன் வேற” என்றவர்.

 தன் கணவனிடம் “ஏங்க! இன்னும் அவங்க ரெண்டுபேரும் எழுந்தரிகல, எப்படி எழுப்பன்னு தெரியல. அவனுக்கு போன் போட்டாலும் எடுக்கல, போய் கதவ தட்டவும் ஒரு மாதிரி இருக்கு என்ன பண்ண?” என்றார்.

அவரைப் பார்த்து சிரித்த சிதம்பரம், “நீ ஏன் இப்படி நடந்துக்கற இப்பவும் அவன் உன் பையன் தான். நீ இப்படி வித்தியாசமா நடந்துக்காத. நேத்துல இருந்து ரெண்டு பேரும் தூங்கமா இருக்காங்க. அதனால எழுவல. போய் கதவத் தட்டு ஹரிஷ் எழுந்துடுவான். “ என்றார்.

இதைக் கேட்டு, “ நானும் இதைத் தான் டாடி இவ்வளவு நேரம் சொல்றான் கேட்ட தான, நானவது போறேனாலும் கேட்க மாட்டேன்றாங்க “ என்றான் பிரவீன்.

“நீ போக வேண்டாம் நாங்க போறோம், வா! சுமதி!, “ என்றவர் மாடிப்படிகளில் ஏறிக் கதவை தட்ட போக, “ வேணாங்க, நாம தொந்தரவு கொடுக்க கூடாது ” என்றவர். “கதவைத்தட்டு” என்றார். கதவில் கை வைத்தவர் தட்டவும், தாழ்போடாமல் இருந்த கதவு திறந்தது தன் மகனையும் மருமகளையும் பார்த்த அவர்கள் சிலையாக நின்றனர் மனம் முழுவதும் மகிழ்ச்சியாக.

போனவர்கள் என்ன ஆனார்கள் எனவும் ஒரு ஆர்வகோளராக அவர்களுக்கு பின்னே வந்தவனும் பார்த்து சந்தோஷத்தில் கத்த, அதில் கலைந்தவர்கள் அவனை முறைத்துவிட்டு அவனை இழுத்து சென்றனர்.

அவன் சத்தத்தில் எழுந்த ஹரிஷ் அவர்கள் போவதை பார்த்து, தாங்கள் இருக்கும் நிலையை பார்த்து சிறிதாக வெட்கபட்டு போனான். பின் இருக்காத, அனந்திதா தன் தலையை அவன் மார்பிலும், அவள் வலது கை அவனுடைய இடுப்பை கட்டிக்கொண்டு உறங்கிக் கொன்டிருந்தாள்.

அவனோ அதற்குமேல் அவளை இறுக்கிக் கொண்டு அவனது இடையை அழுத்திக்கொண்டு அவனுடைய கால்களை அவளின் மேல் போட்டுகொண்டு அவளை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.

 ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தூங்குவது போலவே தெரியும், போர்வைக்குள்ளே அல்லவா இவர்களின் இணக்கதே அறிய முடியும்.

நன்கு யோசித்தவன், உடனடியாக போர்வையை விலக்கிவிட்டு தன்னுடைய மொபைலில் அவர்கள் இருக்கும் கோலத்தை புகைப்படமாக எடுத்துக்கொண்டான்.

நேரமாகிவிட்டதை அறிந்து அவளை எழுப்ப, அவளின் இடையை நன்றாக கிள்ளிவிட்டான். அதில் அதிர்ந்து கண் விழித்தவள் அவனை தன்னருகில் பார்க்கவும் கொதித்து எழுந்து விட்டாள்.

“உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் டா? இப்படி என்ன கட்டிபுடிச்சிட்டு படுத்துட்டு இருப்ப. எல்லாம் மறந்துபோச்சா என்ன பத்தி தெரியும் இல்ல. நான் என்ன பண்ணுவன்னு” என்று கூறிக் கொண்டே படுக்கையில் இருந்து அவனை கீழேத் தள்ளி விட்டாள்.

படுக்கையில் இருந்து விழுந்தவன் அவளுக்கு எதிர்புறமாக இருந்ததால் அவன் சிரித்ததை அவள் அறியவில்லை. மனதில் கூறிக் கொண்டான் “தி டெவில் இஸ் பாக்”.

அவனை முறைத்துக்கொண்டு இருந்தவள், தன்னை சரி செய்துக் கொண்டு எழுந்து நின்றாள். அவள் கீழே தள்ளி விட்ட இடத்திலேயே இருந்ததை பார்த்தவள் என்ன பண்றான் இவ்வளவு நேரமா? என்று யோசித்தவள்.

அவனின் தோள் பற்றி உலுக்கி, “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல? “, என்றாள்.

அவள் உலுக்கியதும் மாட்டனடி நீ இன்னைக்கு என்ன எவ்வளவு torture பண்ணி இருக்க எல்லாத்துக்கும் சேர்த்து இன்னைக்கு உன்னை பழி வாங்க போறேன் என்று மனதில் கூறிக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தான். அவன் பார்வையில் அனந்திதாவே சிறிது அரண்டு தான் போனாள். இருப்பினும் அவனை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.