(Reading time: 22 - 44 minutes)

“அனந்திதா உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ? உன்னை கட்டிபுடிச்சிட்டு தூங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீ தான் எப்பவும் போல பழக்க தோஷத்துல என்னை pillow னு நினைச்சி எங்கிட்ட வந்த. நான் ஒன்னும் உங்கிட்ட வரவில்லை“ என்று பெரிய உத்தமனாக கூறினான்.

அவன் பதிலில் இவள் தான் குழம்பினால் அவளுக்கு தான் தெரியுமே அவன் தலையணையை எடுத்துவிட்டு அவளை அணைத்து முத்தமிட்டு உறங்கியது. தான் ஏதும் கனவு கண்டாலோ ! என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

இவளை யோசிக்க விட்டாள் நாம அவ்வளவு தான் ஒரு விசாரணை கமிஷன் யே வெச்சிடுவ, அதுக்குள்ள அவள டைவேர்ட் பண்ணு டா ஹரிஷ் என்று தனக்குள்ளே கூறி தன் விளையாட்டை ஆரம்பித்தான்.

“என்ன யோசிக்கற நான் ஒன்னும் பொய் சொல்லல, நீ இப்படி ஏதாவது கேட்பன்னு தான் இதுல போட்டோஸ் எடுத்து இருக்கேன் பாரு “, என்று தன் மொபைல் எடுத்து அவளிடம் காட்டினான்.

அவ்வாறு அவன் கூறியவுடன் எதுவும் யோசிக்காமல் அவன் மொபைலில் அவள் மட்டும் தன்னை நெருங்கி இருக்குமாறு ஆன புகைப்படங்களை பார்த்தாள். அதுவும் அவன் கணவனின் கைவண்ணமே, போர்வையை எடுத்தவுடன் தன்னை அவளிடத்தில் இருந்து பிரிந்து ஒதுங்கி இருந்த மாதிரியும் அவள் அவனுடன் ஒன்றி இருந்த மாதிரியான செல்பியை எடுத்து இருந்தான். அதை பார்த்தவள் எவ்வாறு ரியாக்ட் செய்வது என்று புரியாமல் முழித்தாள்.

அதைப் பார்த்தவன் அவளிடம் வம்பு வளர்க்க தோன்றி மேலும் சீண்டினான். “ என்ன மேடம் உங்க டவுட் சால்வ் ஆயிடுச்ச? . இன்னும் என்னை சந்தேகப்படறத விடலையா? “என்றான் குத்தலாக.

அவன் கூறியதில் உடல் விறைத்தவள் அவனை நிமிர்ந்து நோக்கி, “ சந்தேகபடற மாதிரி நடந்த யாராக இருந்தாலும் அப்படி தான் படுவாங்க. நீ ரொம்ப யோக்கியம் மாதிரி பேசாத டா. ‘I KNOW YOU AND YOUR ALL ACTICS, YOU DESERVE THIS.’ “ என்று கூறியவள். அவனை கடந்து செல்ல முயன்றாள்.

அவளை தன் அருகில் இழுத்தவன் அவள் காதருகில் “எனக்கு தெரியும் உனக்கு என்னை பத்தி எல்லாமே தெரியும்ன்னு, ஆனா நீ தெரிஞ்சுக்காம போன விசயமும் இருக்கு. உனக்கு அத தெரிஞ்சுகணும் னு தோணியிருந்த நீ இந்த 3 வருஷத்தை வீணாக்கியிருக்கமாட்டடி “ என்றவன்.

“ இப்போ நடந்தது, நான் போட்டோ காட்டனது உண்மையா இல்லையான்னு நீ வேணும்னா எங்க அம்மாகிட்ட கேட்டுக்கோ? “ என்று அசராமல் ஒரு வெடியைப் போட்டான். அதைக் கேட்டவள் அதிர்ந்து “என்ன சொன்ன? “என்றாள்.

“ஆமா, அம்மா வந்து இருந்தாங்க இப்போ நம்மல எழுப்ப, ரூம் லாக் பண்ணல கதவ தட்டவும் திறந்துடுச்சு போல, நம்மல பார்த்துட்டு எழுப்பாம போய்ட்டாங்க, அவங்க போனதுக்கு அப்புறம் தான் நானே பார்த்தேன். உனக்கு நம்பிகையிலான அவங்க கிட்டயே கேளு” என்றான்.

“உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா, நம்மல இந்த கோலத்துல பார்த்து இருக்காங்க, அவங்களுக்கு ஏற்கனவே நம்ம கல்யாணத்துல நிறைய டவுட் இருக்கும் இதுல இன்னும் அதிகமாயிடும். நீ ரூம்க்கு வந்தவுடனே லாக் பண்ண வேண்டியதுதானே, இது என்ன புதுசா லாக் பண்ணாம ! “ என்றாள்.

“ஏய் ! ரொம்ப பண்ணாதடி, நாம இப்போ HUSBAND அண்ட் WIFE, SO நீ ஒன்னும் பயப்படவேண்டாம். அவங்க தப்பா எடுத்துக்க மாட்டாங்க, நம்மல இப்படி பார்த்து சந்தோசம்தான் படுவாங்க. அப்பறம் நாம 3 வருஷத்துக்கு முன்னாடி இருந்தவங்க இல்ல இப்போ ரூம் லாக் பண்ண, அது எல்லாம் எப்பவோ முடிஞ்சி போய்டுச்சு. சீக்கிரம் போய் ரெப்ரெஷ் ஆயிட்டு கீழே போ. நானும் வந்து ஜாயின் பண்ணிப்பேன். “ என்று பக்கத்தில் இருந்த கெஸ்ட் ரூமிற்கு சென்றான்.

அவன் சென்றவுடன் அவன் கூறியதை நினைத்து பார்த்தவள் தன் கண்களை இறுகமூடி தன்னை சமன்படுத்திக் கொண்டு தயாராக சென்றாள்.

அவர்களை பார்த்துவிட்டு வந்த மூவரும் மகிழ்ச்சியாகவே கீழே இறங்கினர்.

“அண்ணா இவ்வளவு ரொமாண்டிக் ஆ இருப்பாங்கனு நினைக்கவேயில்லை ! “ என்று ஆச்சரியமானான்.

“டேய் ! உன்ன தான் வரகூடாது னு விட்டுடு போனோம் இல்ல எதுக்குடா மேல வந்த? “ என்று அவன் காதைத் திருகினார் பிரவினின் தந்தை.

“அது வந்து டாடி, ஒரு ஆர்வமா இருந்ததா அதுதான் வந்தேன்” என்றுக் கூறி சமாளித்தான். “போய் வேற வேலை ஏதும் இருந்த பாரு டா “ என்று அவனை துரத்தினார்.

அவன் சென்றவுடன் தன் மனைவியிடம், “ ஜோசியர் இன்னைக்கு நல்லா நாள் தான் இன்னைக்கே முதலிரவு வெச்சிக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க. அதுக்கான ஏற்பாடு பண்ணு, நான் தினேஷ்யையும் ப்ரீத்தியையும் (ஹரிஷின் பெரியப்பா பையனையும் அவன் மனைவியும்) வர சொல்லிருக்கேன். அவங்க உதவி பண்ணுவாங்க. நீ மத்தத பாரு “ என்று கூறிவிட்டு சென்றார்.

அனந்திதா தன் அறையில் இருந்து வந்து இருந்தாலும் எப்படி கீழே செல்வது என்று தயக்கத்துடன் இருந்தாள். அவள் தைரியமானவளாக இருப்பினும் ஹரிஷ் தங்களை தன் மாமியார் பார்த்துவிட்டு சென்றதாகக் கூறியிருந்ததால் அவள் தயங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.