ரஞ்சனி அறைக்குள் வந்த போதும் ஹரிணி அவளிடம் எதையும் கேட்கவில்லை. ரஞ்சனியும் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் ஹர்ஷாவின் அறையில் முரளி அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான்.
“பிரின்ஸ், எல்லோரும் சொன்ன போது கூட நான் நம்பவே இல்லை. ஆனா நான் நேராகவே பார்த்தேன். அதுவும் பீச்சில் ஆகாஷ் உடன்”
“முரளி அவங்க பிரண்ட்ஸா கூட இருக்கலாம். அப்படியே அவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பினா அது அவங்க பெர்சனல் விஷயம். நீ உன் விருப்பத்தை சொல்லியும் மானு பதில் சொல்லலையே”
“பிரின்ஸ் அந்த ஆகாஷ் நல்லவன் இல்லை. நான் நல்லா விசாரித்து விட்டேன். அவள் அவனை ரொம்பவே நம்பிகிட்டு இருக்கா. எனக்கு அது தான் கஷ்டமா இருக்கு” முரளியின் உண்மையான நேசத்தை ஹர்ஷா உணர்ந்தான். அவன் தவிப்பும் புரிந்தது.
“அதுவும் இன்னிக்கு அவ செய்தது பெரிய தப்பு. துரை சார் கண்டிப்பா அவளுக்கு சர்டிபிகேட் தர மாட்டார். எனக்கு அதுவும் பயமாக இருக்கு”
“முரளி, நீ குழப்பிக்காம உன்னோட கோர்ஸ் ஒழுங்கா முடி. இன்னும் த்ரீ மந்த்ஸ் தான் இருக்கு. மானுக்கு ஏதேனும் ப்ராப்ளம்னா வி வில் பி தேர் பார் ஹர்” அவன் ஆறுதல் சொல்ல முரளி சற்று நிம்மதி அடைந்தான்.
ஹர்ஷவர்தனுக்கு அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த மெடிகல் ஸ்கூல்களில் இருந்து மேற்படிப்பிற்க்கான நேர்முக தேர்விற்கு அழைப்பு வந்திருந்தது.
அவன் ஹரிணியிடம் மட்டும் தான் சொன்னான்.
“ஹே கங்கிராட்ஸ், கிரேட்” என்றெல்லாம் துள்ளி குதிக்கவில்லை அவள்.
“எப்போ போகணும், உனக்கு எங்கு சென்று சேர விருப்பம். கார்டியாக் சர்ஜரி எங்க நல்லா இருக்கோ அங்க ஜாயின் செய்” இவ்வளவு தான் சொன்னாள்.
“நானும் ரொம்ப நாளா கேட்கணும்ன்னு நினச்சுட்டே இருந்தேன். என்னை ஏன் எப்போ பாரு கார்டியாக் சர்ஜன் ஆகணும்னு சொல்ற. பர்ஸ்ட் இயர்லேயே சொல்லிருக்க” அவனது நீண்ட நாள் கேள்வியை அவள் முன் வைத்தான்.
“எனக்கு புக்ஸ் படிக்க ரொம்ப பிடிக்கும். நான் படித்த ஒரு நாவலில் ஒரு வரி வரும். சம் பீபில் ஆர் பார்ன் டு பி டாக்டர்ஸ்ன்னு. அனாடமில அன்னிக்கு அந்த ஹார்ட் நீ டிஸக்ட் செய்த போதே அதை பார்த்து எனக்கு மனசில் தோன்றியது. யு ஆர் பார்ன் டு பி கார்டியாக் சர்ஜன்”
அவள் அன்று சொன்னதில் இருந்தே அவனை அறியாமல் அவன் மனதின் ஆழத்தில் அந்த விதை விதைக்கப்பட்டிருந்தது.
பயிற்சியின் இறுதி மாதம். ஹர்ஷாவும் ஹரிணியும் செப்டிக் வார்ட்டில் பணியில் இருந்தனர்.
“லீவுக்கு சொல்லிட்டியா” ஹரிணி கேட்டாள்.
“ஒரு வாரம். ஒகே ஆகிருச்சு. மூன்றாவது வாரத்தில் போகிறேன். சர்ஜரில இருந்து ஒருத்தரை அந்த வீக் என்னோட இடத்திற்கு போஸ்டிங் செய்துட்டாங்க” எல்லாம் நல்லபடியாக முடிந்த மகிழ்ச்சியில் கூறினான் ஹர்ஷா.
ஆனால் அவன் மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.
முடிவிலியை நோக்கி ...
{kunena_discuss:1137}