அவள் நீட்டியது ஒரு விலை உயர்ந்த பேனா.
அவன் தன் பெற்றோரைப் பார்த்தான். அவர்களும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவள் நீட்டிய பேனாவைப் பெற்றுக்கொண்டான். அதன் பிறகு தனது அறைக்குச் சென்றுவிட்டான்.
“என்னம்மா திடீர்னு எல்லோருக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துருக்கே?”
வனிதாமணி கேட்டார்.
“நான் இங்கே வரும்போதே வாங்கிட்டு வரனும்னு நினைத்தேன் அத்தே. அப்ப உங்களோட ரசனை என்னன்னு தெரியலை. அதனால்தான் இப்ப வாங்கிட்டு வந்தேன். பிடிச்சிருக்கா அத்தே?”
ஆவலுடன் கேட்டாள்.
“ரொம்ப பிடிச்சிருக்கும்மா.”
“டேய் உனக்கு?”
யுகேந்திரனைப் பார்த்துக்கேட்டாள்.
“பிடிச்சிருக்கு. உனக்கு எடுத்துக்கலையா?”
“எனக்குதான் நிறைய இருக்கே. அதான் எடுத்துக்கலை.”
அவன் யோசனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ோது மற்றவர்களுக்கு பரிசாக உடையும் வாங்கித் தந்திருக்கிறாள்.
அதை சாருலதாவிடம் சொல்ல மனம் வரவில்லை. எப்போதும் தன்னை அலட்சியமாக பார்த்து ஒதுங்கிச் செல்பவள் இன்று வலியக்க வந்து பேசும்போதே தான் யோசித்திருக்க வேண்டும்.
“அவ சொல்ல மாட்டா சாருக்கா. அவகிட்ட வாங்கிக்கிட்ட நான் சொல்றேன்.”