“சாருக்கா. வீட்டில் யாரும் வரலையா?”
“அவங்க எல்லாம் வர்றாங்க. நான் நம்ம வீட்டோட சேர்ந்துபோகலாம்னு வந்தேன்.”
அவள் சொல்ல யுகேந்திரன் பல்லைக் கடித்தான்.
‘நம்ம வீடாமே.’
மகேந்திரன் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான். பின்னே உள்ள இருக்கையில் பெரியவர்கள் இருவரும் அமர்ந்துகொள்ள அதற்குப் பின்பக்கம் உள்ள இருக்கையில் சிறியவர்கள் இருவரும் அமர்ந்துகொண்டனர். மகேந்திரன் காரைக் கிளப்பினான்.
ரிசப்சனுக்கு சரியான நேரத்திற்குச் சென்றுவிட்டனர்.
சற்று நேரத்தில் சாருலதாவின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். அவர்களைக் கண்டதும் சாருமதி முகமலர்ச்சியுடன் ஓடிவந்தாள். கிருஷ்ணவேணியை அணைத்துக்கொண்டாள்.
சாருலதாவின் பெற்றோர் நாடகத்தனமான புன்னகையை சிந்தினர். அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்தனர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11203-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-07">Episode # 07
{kunena_discuss:1182}