அவன் தான் பேசியதை எல்லாம் கேட்டிருப்பானா? என்ற சந்தேகத்தில் அவனைப் பார்த்தாள் சாருலதா.
அடுத்து அவன் சொன்ன பதில் அதை உறுதி செய்தது.
அவள் என்ன செய்தாள் என்று அப்படியே சாருலதாவிடம் கூறினான். கிருஷ்ணவேணி அமைதியாக நின்றிருந்தாள்.
சாருலதா அவன் கூறியதை நம்ப முடியாமல் பார்த்தாள்.
“சாருக்கா. எங்க வீட்டுக்கு கிருஷ்ணவேணியை பணத்திற்காக அழைத்து வரவில்லை. அவளோட பாசத்திற்காகதான் அழைத்து வந்தேன். எங்க வீட்டில் எல்லோரும் அதைதான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் உங்க தோழிகளை வேற வீடு கிடைக்குதான்னு பார்த்துக்க சொல்லுங்க.”
அவளிடம் சற்று கடுமையாக சொல்லிவிட்டு சென்றான். அன்று இரவு தனது வீட்டிற்குச் செல்லாமல் அவள் அங்கேயே தங்கிவிட்டாள்.
கிருஷ்ணவேணி அங்கே தங்க வந்த பிறகு அவளால் நிம்மதியாக இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணுக்கு ரிசப்சன் தெரியும்ல.”
பொதுவாக கேட்டார்.
“தெரியும்மா.” ரவிச்சந்திரன் பதில் சொன்னார்.
“இப்ப தெரியும்னு சொல்லிட்டு நாளைக்கு எனக்கு வேலை இருக்கு. நீ போயிட்டு வந்துடுன்னு சொல்லக்கூடாது. அவர் ரொம்ப முக்கியமானவர்.”
“எனக்கும் தெரியும்மா. கண்டிப்பா வந்துடுவோம்.”