“அம்மாகிட்ட எதுவும் உளறி வைக்கலையே?”
அவள் பாவமாக பார்த்தாள்.
“நீ வரமாட்டேன்னு சொல்வேன்னு கொஞ்சம் கூட சந்தேகப் படாம உனக்காக டிரஸ் எடுத்து வச்சிருக்காங்க பார்த்தியா?”
அவள் தலையாட்டினாள்.
கல்லூரியில் இருந்து கிளம்பும்போது அவள் தயக்கத்துடன்தான் அந்த ரிசப்சனுக்கு வர விருப்பம் இல்லை என்று தெரிவித்தாள்.
அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்கள். அவர்கள் வீட்டு விசேசத்திற்கு தான் எப்படி செல்ல முடியும்?
அவன் அவளைத் திட்டினான்.
“உன்னை நாங்க பிரிச்சே பார்க்கலை. நீ இன்னமும் எங்களை மனதளவில் வேற்றாளாய்தான் பார்க்கிறே?”
அது அவளைச் சுட்டது.
“கீர்த்திவாசன் அங்கிள் எங்களுக்குப் பழக்கமானவர்தான். கிராமத்தை விட்டு பட்டணத்து வாழ்க்கைக்கு வந்தபிறகு பழக்கப்பட்டவங்கதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
?”
அவள் தலையாட்டினாள்.
மகேந்திரனும் வர காருக்குச் சென்றனர்.
அப்போது சாருலதாவும் வந்துவிட்டாள்.
“சரியான நேரத்திற்கு வந்துட்டேனா?”
கேட்டுக்கொண்டே வழக்கம்போல் முன்சீட்டில் ஏறி அமர்ந்துவிட்டாள்.
வனிதாமணி தனது கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்தார்.