“அவ எதுக்கும்மா நம்ம வீடே கதின்னு கிடக்கிறா? நாம எங்கே போனாலும் உரிமையோட நம்மோடவே வந்து நிற்கிறா. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? இது நல்லதுக்கில்லை. அவ என்னமோ மனதில் திட்டத்தோடதான் நடந்துக்கிறா?”
அவர்தான் அவனை கையமர்த்தி வைக்க பாடுபடுவார்.
அவள் அந்த வீட்டுப் பெண் என்று மற்றவர்களுக்கு பறைசாற்றவதில் ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டாள் சாருலதா.
சாருலதாவை தெரியாதவர்கள் வனிதாமணியிடமே அவரது பையனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணா? என்று ஓரிருவர் கேட்டிருக்கின்றனர். அப்படி கேட்டதை அவர் இன்னும் யுகேந்திரனிடம் சொல்லவில்லை. இல்லை என்றால் அவன் கோபப்படுவான்.
அது முற்றிப்போவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் மனதை சதா சிந்தனை அரித்துக்கொண்டிருக்கிறது.
இப்போது கூட தன் மன எரிச்சலை ஆற்றிக்கொள்ளத
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ற குதூகலக் குரல் அவரை திரும்பிப்பார்க்க வைத்தது.
யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் கூட நின்றுவிட்டனர்.
எதிரில் நின்றிருந்த பெண்மணியை சட்டென அடையாளம் தெரியாமல் விழித்த வனிதாமணி அவரது அழைப்பை நினைவுகூர்ந்து முகம் மலர்ந்தார்.
“மணி…? மணிதானே?”
கேள்வியுடன் பார்த்தார்.