அவள் மேலும் அங்கேயே நின்றிருக்காமல் கீழே இறங்கினாள். தண்ணீரை எடுப்பதற்காக சமையல் அறைக்குச் சென்றவள் அங்கே ஏற்கனவே விளக்கு போடப்பட்டிருந்ததைப் பார்த்து அத்தை அமர்த்த மறந்துவிட்டாரா என்ற யோசனையுடன் உள்ளே நுழைந்தாள்.
அதன் பிறகு அவள் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
“ஏய் கிருஷ்! எதற்கு இப்படி சிரிக்கிறே?”
கேட்ட யுகேந்திரனைப் பார்த்த அவளுக்கு மீண்டும் சிரிப்பு பொங்கி வந்தது.
வனிதாமணி எதற்காக வரவேற்புக்குப் போகும் அவசரத்திலும் சப்பாத்தியும் குருமாவும் செய்துவிட்டு வந்தார் என்று இப்போது புரிந்தது.
வாயில் சப்பாத்தி குருமா வழியதான் அவன் அவளிடம் கேள்வி கேட்டதே.
“டேய் அங்கே பங்சன்ல ஒழுங்கா சாப்பிட வேண்டியதுதானே?”
என்று குறைபட்டுக்கொண்டாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும்பிப்பார்த்தனர்.
“என்னண்ணா?”
“தண்ணீர் இல்லை. எடுக்க வந்தேன்.”
தண்ணீர் ஜக்கைக் காட்டினான்.
தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பியவனை அழைத்தாள் கிருஷ்ணவேணி. அழைத்த பிறகு எந்த தைரியத்தில் அழைத்தோம் என்று பயத்துடனே பார்த்தாள்.
அவன் திரும்பி அவளைப் பார்த்தான்.