(Reading time: 20 - 40 minutes)

“ஆமா. மணியேதான்.”

என்று சொன்ன அந்தப் பெண்மணி வனிதாமணியை அப்படியே அணைத்துக்கொண்டார்.

அதில் ஒருவித வாஞ்சை தெரிந்தது.

“எத்தனை வருடங்களாச்சு உன்னைப் பார்த்து? எப்படி இருக்கே? எத்தனை பிள்ளைங்க? ….”

மூச்சு விடாமல் கேள்வி மேல் கேள்வியாக கேட்ட தன் பால்ய சிநேகிதி மணிமேகலையைப் பார்த்து “நீ மாறவேயில்லை” என்று சொல்லிவிட்டு கடகடவென சிரித்தார்.

அவர்கள் சாப்பிட்டு விட்டு ஒரு ஓரமாக கிடந்த நாற்கலிகளில் அமர்ந்திருந்தனர்.

பிள்ளைகள் இருவரும் வனிதாமணியை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

அவரை அந்த அளவிற்கு சிரித்து சந்தோசத்தை வெளிப்படுத்தி பார்த்ததேயில்லை. ஒரு சின்ன புன்னகையோடு நிறுத்திக்கொள்வார். இப்போது சத்தம் போட்டு சிரிக்கிறார் என்றால்?

அவர்களின் ஆச்சர்யப் பார்வையைப் பார்த்த உட

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்டது.

அவளை அருகில் அழைத்தார்.

அவரது அருகில் வந்த அவள் காலில் விழுந்தாள். அவளை ஆசிர்வதித்து உச்சி முகர்ந்த மணிமேகலை

“நல்லப் பொண்ணா இருக்கா. கோட்டை விட்டுடாதே.” என்று வனிதாமணியின் காதில் கிசுகிசுத்தார்.

அது பக்கத்தில் நின்றிருந்த யுகேந்திரனின் காதில் விழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.