(Reading time: 20 - 40 minutes)

“அது நான் இருக்கிற வரைக்கும் நடக்காது மணிம்மா. நான் பார்த்துக்கிறேன். என்னோட அம்மாவிற்கு என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோணவே தோணாது. இதுவே மூத்த மகனா இருந்திருந்தா இந்நேரம் சொல்லியிருப்பாங்க.”

என்று குறைபட்டுக்கொண்டே அவனும் அவரது காலில் விழுந்தான்.

அவர் நெகிழ்ந்துபோனார். அவனையும் ஆசிர்வதித்து உச்சி முகர்ந்தார்.

அவன் மணிம்மா என்று அழைத்தது அவருக்குப் பிடித்திருந்தது. அவன் எப்போதாவது வனிதாமணியையும் வனிம்மா என்றுதான் அழைப்பான்.

“ஏன் வனி பிள்ளைக்கு ஓரவஞ்சனை பண்றே?” என்று மணிமேகலை அவரிடம் கடிந்துகொண்டார்.

“அதெல்லாம் இல்லை மணி. இவன் வேணும்னே வம்பிழுப்பான். சொல்லப்போனா இவனைத்தான் நான் அதிகம் கவனிக்கிறதே. நீ கிருஷ்ணாகிட்ட வேண்டுமானாலும் கேட்டுக்கோ.”

“போனாப் போயிட்டு போறா

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அறையில் தண்ணீர் இல்லாதது தெரிந்தது. சரி எடுத்து வரலாம் என்று அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அப்போது மாடியில் இருந்து மகேந்திரன் வந்துகொண்டிருந்தான். அவன் அவளைக் கவனிக்கவில்லை.

தலையைக் கையால் பிடித்தவாறே வந்துகொண்டிருந்தான்.

தனது அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.