“நீங்க என்ன சொல்லறீங்க அப்படின்னே எனக்கு புரியலை... எனக்கு ராமுன்னு யாரையும் தெரியாது... அப்பறம் நான் ஏன் அவரை வெளிய எடுக்க முயற்சி செய்யப்போறேன்... நீங்க சொல்றா மாதிரி என்னோட மேனேஜரோட உறவுக்கார பையன்னா நீங்க அவரைத்தான் கேள்வி கேட்கணும்...”
“அப்படியா சொல்றீங்க... சரி அவரையே கேட்போம்... இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க... உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு வங்கிக்கணக்கிலிருந்து அடிக்கடி பணம் அனுப்பபட்டிருக்கே... அது யாரால்....”
“அவர் என்னோட friend.... நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அங்க பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம்... அதுல வர்ற லாபத்தை மொத்தமா அனுப்பாம அப்போ அப்போ கொஞ்ச கொஞ்சமா அனுப்புவார்...”
“ஓ அப்படியா... அப்படி என்ன பிசினஸ் பண்றீங்க நரேஷ்....”
“அது ஒரு electronic கடை வச்சிருக்கோம்...”
“நீங்களும், உங்க நண்பரும் மட்டும்தான் அந்த கடையை நடத்தறீங்களா... இல்லை வேற யாரும் அதுல கூட்டா இருக்காங்களா...”
“நானும் என் நண்பரும் மட்டும்தான் அதை நடத்தறோம்...”
“ஓ அப்போ உங்க நண்பர் எதுக்காக ராமுவோட அக்கௌன்ட்டிற்கு உங்களுக்கு அனுப்பினா மாதிரியே பணம் அனுப்பி இருக்கார்....”,பாரதி கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நரேஷ் முழித்தான்..
“ராமுவின் வங்கிக்கணக்கு விவரங்கள் யுவர் ஹானர்... இதை நீங்கள் நரேஷின் வங்கிக்கணக்குடன் ஒப்பிட்டு பார்க்கலாம்...”
நீதிபதி இரு கணக்குகளையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றாக இருப்பதை பார்த்து நரேஷிடம் கேட்க அவனால் பதில் அளிக்க முடியவில்லை...
“நீதிபதி அவர்களே இந்தப் பணம் எதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதற்கு முன்னால் நான் நரேஷ் வீட்டில் எடுத்த காணொளியை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....”,பாரதி கூற நீதிபதி அங்கிருந்த டிவியில் வீடியோவை ஓடவிட்டார்...
நரேஷின் வீட்டில் அவனின் படுக்கையறைக்குள் நுழைந்து பாரதி அந்த சிலையின் உதவியுடன் கட்டிலை திறப்பது காணொளியாக திரையில் வந்தது... கட்டிலைத் திறந்தவுடன் அதிலிருந்த பொருட்களைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்...
தொடரும்
{kunena_discuss:1100}