அவளை கிருஷ்ணவேணி பொன்னிம்மா என்று தான் அழைக்கிறாள்.
பொன்னிக்கும் அவள் மீது அந்த வீட்டினரைப்போன்றே ஒரு பாசம் உண்டாகியிருந்தது.
பொன்னியும் வனிதாமணியும் தீபாவளி பலகாரம் செய்ய ஆரம்பித்தனர்.
சிறியவர்கள் இருவரும் ஊர் சுற்றக் கிளம்பினர்.
மகேந்திரன் வீட்டுக்குள் நுழைந்தான்.
வீடே அமைதியாக இருந்தது.
யுகேந்திரன் இருந்திருந்தால் எப்போதும் ஏதாவது கலகலத்துக்கொண்டேயிருப்பான். இப்போது அந்த சத்தம் இல்லாதது என்னவோ போல் இருந்தது.
அவன் வீட்டுக்குள் நுழைவதை சமையல் அறைக்குள் இருந்தாலும் எப்படித்தான் கண்டுகொள்வாரோ? வனிதாமணி அவனுக்குக் குடிக்க கொறிக்க என்று ஏதாவது சமயத்திற்கு ஏற்ற மாதிரி கொண்டு வந்து கொடுப்பார்.
அத்துடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ம யுகேந்திரன் இன்னும் விளையாட்டுப்பிள்ளையாவே இருக்கான்.”
மகேந்திரன் அவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. பேசாமல் உள்ளே சென்றுவிட்டான்.
‘ஏதாவது சொல்றானா பாரு. அப்படியே அழுத்தம். இவன் அவளைப் பத்தி என்ன நினைக்கிறான்னு தெரியலையே?’
தனக்குள் புலம்பிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.