அவன் பேசியது சரிதான் என்று கூறிய மைதிலி, ஷ்யாம் தன் அறைக்கு சென்ற பின் தீவிர யோசனையில் இறங்கினாள்.
அதன் பலனாக அவளுக்கு ஒரு தெளிவு கிடைக்க, அன்று இரவு ராம் வந்து உணவு எல்லாம் முடித்து, தங்கள் அறைக்கு சென்ற பின், அவனிடத்தில் தன் எண்ணத்தை சொன்னாள்.
அதற்கு ராம் “நோ.. மைதிலி.. இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். “
“ராம் .. எனக்கு என்னவோ இதுதான் சரியா வரும்னு தோணுது”
“அப்படின்னா, அதை முன்னாடியே சொல்லிருக்கனும். இவ்ளோ தூரம் வந்ததுக்கு அப்புறம் சொல்லக் கூடாது.”
“அப்படி இல்லைங்க.. அப்போ இருந்த சூழ்நிலை எல்லாம் சரியா வரும் என்று நினைத்தேன். இப்போ அது தப்போன்னு அடிக்கடி தோணுது.
“உனக்கு தோணுது என்பதற்காக எந்த முடிவும் எடுக்க முடியாது மைதிலி. இதன் சாதகத்தை விடவும், பாதகமே அதிகம். அதை எவ்ளோ தூரம் என்று யாரிடமும் கேட்க கூட முடியாது. அதனால் இதை பற்றி இனிமேல் எதுவும் பேசக் கூடாது. “
என்று முடிவாக சொல்லி முடித்தான் ராம்.
இவர்களின் குழப்பங்களோடு, கல்யாண வாரமும் வந்தது. முதலில் மெஹந்தி முடித்து விடலாம், பிறகு கல்யாண மேக்அப் செய்து கொள்ளலாம், என்பதால் திருமணத்திற்கு இருநாள் முன்னாடி மெஹந்தி களைகட்டியது.
தொடரும்
{kunena_discuss:1187}