வரவேற்பறையில் அவர்கள் அமர்ந்திருந்த சோஃபாவிற்கு எதிரே இருந்த மற்றொரு சோஃபாவில் அமர்ந்தாள். எழுந்து முகம் கழுவிய கையோடு அப்படியே வந்திருக்கிறாள். குளிக்கவில்லை. ஆனாலும் சிறு ஒப்பனை தெரிந்தது.
இரவு போட்டிருந்த நைட்டியோடு வந்திருந்தாள். அது அவள் உடலோடு ஒட்டி இருந்தது.
ஆண்கள் இருவருக்கும் அவளை நிமிர்ந்து பார்ப்பது கடினமாக இருந்தது.
வேறுபக்கம் பார்வையைத் திருப்பிக்கொண்டனர்.
அவளுக்காக தேநீர் கொண்டு வந்த வனிதாமணிக்கும் அவளைப் பார்த்து சங்கடமாய் இருந்தது.
‘என்ன பெண் இவள்? வயதுப் பையன்கள் இரண்டு பேர் இருக்கும் வீட்டில் இப்படியா வந்து நிற்பாள்? ஒரு துண்டையாவது தோளில் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம் அல்லவா?’
நினைத்ததை வாய் விட்டுச் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே புலம்பியபடி உள்ளே ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரன் தயங்கினான்.
தம்பிக்குப் பிடித்த பெண்ணைப் பத்தி தான் தவறாகப் பேசினால் அதனால் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாகிவிட்டால் அதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று அவனுக்குத் தோன்றியது.
ஆனால் அந்தத் தயக்கம் சாருலதாவிற்கு இல்லையே?
அவள் கேட்டுவிட்டாள்.