கிருஷ்ணவேணியும் மரியாதை நிமித்தம் வரவேற்றுவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவளைக் கண்ட அவர்களின் முகத்தில் தெரிந்த மாற்றமே அவளை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லாமல் சொன்னது. வேண்டாவெறுப்பாய் மற்றவர்களுக்காக சிரித்துவைத்தனர். அதனால்தான் அவள் அங்கேயே இராமல் தனது அறைக்குச் சென்றது. அவர்கள் யுகேந்திரனின் உறவினர்கள். அவர்களுடன் தனக்கு என்ன பேச்சு? என்று சென்றுவிட்டாள். இதுவே சாருமதி வந்திருந்தால் அவளையும் தனது அறைக்கு அழைத்து வந்திருப்பாள். ஏனோ அவள் வரவில்லை.
இரவு உணவிற்கு யுகேந்திரன் அழைக்க வரும் வரையில் அவள் தனது அறையை விட்டு நகரவில்லை. அவர்கள் இருந்தால் என்ன செய்வது என்று பேசாமல் இருந்துவிட்டாள்.
“என்ன கிருஷ்? இவ்வளவு நேரம் தனியாவே உட்கார்ந்துட்டே? நீ உடை மாற்றிவிட்டு வருவேன்னு நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
“யுகா.”
“இப்ப எதுவும் பேச வேண்டாம்.”
இருவரும் உள்ளே சென்றுவிட வேறுபக்கமாய் ஒதுங்கியிருந்த மகேந்திரனுக்கு அவர்கள் பேசியது எல்லாம் காதில் விழுந்திருந்தது.
அவள் பேசியது தன் தம்பிக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் பேச்சைத் தவிர்த்து உள்ளே செல்கிறான் என்று எண்ணிக்கொண்டான்.