(Reading time: 25 - 49 minutes)

இடையில் யுகேந்திரன் வந்து சாப்பிட அழைத்த போது அவன் பசி தாங்க மாட்டான் என்று அவனை சாப்பிடச் சொல்லிவிட்டாள். அவள் மணமக்கள் சாப்பிட வரும்போது வருவதாகச் சொல்லிவிட்டாள்.

சாருமதிக்கு அவளைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.

அவளை ஒரு சில முறைகளே பார்த்திருக்கிறாள். தான் சொன்னதற்காக கூடவே நிற்கிறாள்.

அவளுக்கு இருக்கும் பாசம் கூட தன் உடன் பிறந்த தங்கைக்கு இல்லையே. தமக்கை திருமணமாகி புகுந்த வீட்டிற்குப் போகப் போகிறாள். அவளுடன் நேரம் செலவிடுவோம் என்று அவளுக்குத் தோன்றுகிறதா?

அவள் சாருலதா எங்கே என்று பார்த்தாள். அவள் மகேந்திரன் குடும்பத்தாரோடு உணவருந்தச் செல்வது தெரிந்தது.

ஒரு விரக்திப் புன்னகையுடன் மேடைக்கு வந்தவர்களிடம் கடனே என்று பரிசுப் பொருட்களைப் பெற்று புகைப்படம் எடுப்பதற்கு நின்றாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

றவர்களுக்குக் கேட்கும்படி பேசியவள் கிருஷ்ணவேணியை சாப்பிட வலியுறுத்தினாள்.

தன் தங்கைக்கு இப்போது வைத்த குட்டு போதும் என்று தோன்றியது. அவள் தன்னை முறைப்பதைக் கண்டும் அவள் பயப்படவில்லை. இனி எப்போதும் பயப்பட போவதில்லை என்று நினைத்துக்கொண்டாள். அவள் இப்போது அடுத்த வீட்டு பெண்ணாகி விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.